News September 14, 2024
வேலூரில் இன்று நடந்த குரூப் 2 தேர்வில் 3,464 பேர் ஆப்சென்ட்

தமிழக முழுவதும் இன்று நடைபெற்ற குரூப் 2 முதல் நிலைத் தேர்வு 2127 இடத்திற்கு. 7.93 லட்சம் பேர் தேர்வு எழுதினார், அதில். வேலூர் மாவட்டத்தில் இன்று நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2A ஆகிய தேர்வுகளில் பங்கேற்க 13,139 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, அவர்களில் 9,675 பேர் இன்று தேர்வு எழுதினர், 3464 பேர் தேர்வு எழுத வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News November 25, 2025
வேலூர் அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி!

வேலூர் அஞ்சல் கோட்டம் சார்பாக மாவட்ட அளவிலான அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி வரும் டிச.12, 13 ஆகிய தேதிகளில் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தண்டபாணி திருமண மஹாலில் நடைபெற உள்ளது. இதில் அஞ்சல் தலைகள், சிறப்பு உரைகள் வெளியீடு, வினாடி வினா, கடிதம் எழுதுதல் போன்ற போட்டிகள் நடைபெற உள்ளன. எனவே குழந்தைகள், மாணவர்கள், பொதுமக்கள் இதில் பங்கேற்க வேண்டும் என அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News November 25, 2025
வேலூர்: அறிவியல் கல்வி சுற்றுலா.. வழியனுப்பிய கலெக்டர்!

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் அறிவியல் கல்வி சுற்றுலா செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (நவ.25) ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் ஜோதீஸ்வரப்பிள்ளை உட்பட பலர் உடனிருந்தனர்.
News November 25, 2025
வேலூர்: உங்கள் ஊரில் ரோடு சரியில்லையா?

வேலூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.


