News April 16, 2024
வேப்பந்தட்டை: ரூ.3,30,000 ரொக்கம் பறிமுதல்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடி – மரவநத்தம் பிரிவு பகுதியில் தேர்தல் தணிக்கை குழுவினர் இன்று(ஏப்.16) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி, பொள்ளாச்சி மாவட்டத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவர் எடுத்து வந்த ரூ.3,30,000 ரொக்கத்தை தேர்தல் தணிக்கை குழுவினர் கைப்பற்றினர்.
Similar News
News November 8, 2025
பெரம்பலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.7) இரவு 10 மணி முதல் இன்று (நவ.8) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 7, 2025
பெரம்பலூர்: முதியவரின் சடலம் மீட்பு

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் 3 ரோடு மேம்பாலம் அருகே நேற்று 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News November 7, 2025
பெரம்பலூர்: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்!

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கை முடக்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
1.உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
2.ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
4.விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT


