News February 18, 2025

வேப்பந்தட்டை அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அ.மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் – ரஞ்சனி (25) தம்பதியருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, 4 வயது ஆண் குழந்தை உள்ள நிலையில், கணவன்-மனைவியிடையே குடும்ப தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்த ரஞ்சனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 22, 2025

பெரம்பலூர் மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

image

தென்கிழக்கு வாங்க் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.22) அவ்வப்போது மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஷேர் பண்ணுங்க!

News November 22, 2025

பெரம்பலூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

பெரம்பலூர் மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, இங்கே <>கிளிக் <<>>செய்து, அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை லைசன்ஸ் வைத்திருக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 22, 2025

பெரம்பலூர் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற நவ.24ஆம் தேதி எரிவாயு நுகர்வோர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், சம்பந்தப்பட்ட எரிவாயு முகவர்கள் மற்றும் நிறுவன விற்பனையாளர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே எரிவாயு நுகர்வோர் இது தொடர்பாக புகார் மற்றும் குறைகள் இருப்பின் இக்கூடத்தில் பங்கேற்று, தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!