News August 2, 2024

வேன் மோதி சாப்ட்வேர் இன்ஜினியர் பலி

image

பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் சதீஷ் (27). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் நேற்றிரவு வேளச்சேரி அருகே பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மயிலை பாலாஜி நகர் அருகே இரவு 12.45 மணியளவில், எதிரே வந்த வேன் ஒன்று அவர் மீது மோதியது. இடத்தில், அவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் திருமலையை (42) கைது செய்தனர்.

Similar News

News December 5, 2025

செங்கல்பட்டில் 5.31 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?

image

தமிழகத்தில் டிச.16-ம் தேதியுடன் நிறைவடையும் எஸ்ஐஆர் பணியில் 77.52 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படவாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 10.40 லட்சம் பேர் (இறந்தவர்கள் மட்டும் 1.49 லட்சம்) பேர் நீக்கப்படலாம். அதற்கடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 5.31 லட்சம் பேர் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

News December 5, 2025

செங்கல்பட்டு: இதற்கு எப்போது தீர்வு?

image

மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா, ஆங்கில புத்தாண்டு, பொங்கல், கர்நாடக பக்தர்கள் படையெடுப்பு என, விழாக்காலம் துவங்க உள்ளது. இக்காலத்தில் வாகன நெரிசலால் போக்குவரத்து முடங்காமல் தவிர்க்க, நகராட்சி நிர்வாகம் முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஏற்கனவே இங்கு வாகன நெரிசலால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் பாதிக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

News December 5, 2025

செங்கல்பட்டு: இரவு நேர ரோந்துக் காவல் விவரம்

image

செங்கல்பட்டில் இன்றைய(டிச.4) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!