News February 16, 2025

வேன் மோதி இரண்டு வயது குழந்தை பலி

image

கம்பைநல்லூர் ஜேஜே நகர் பகுதியை சேர்ந்த சூர்யா இவரது 2 வயது ஆண் குழந்தை நேற்று வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு வந்த சரக்கு வாகனம் குழந்தை மீது மோதியதில் படுகாயமடைந்த குழந்தையை  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கம்பைநல்லூர் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 16, 2025

தருமபுரி: ஒரு புகாருக்கு ரூ.1,000-மிஸ் பண்ணாதீங்க!

image

தருமபுரி மக்களே, நெடுஞ்சாலையில் நாம் உபயோகிக்கும் கழிவறைகள் பெரும்பாலும் முகம் சுளிக்க வைக்கும் வகையில்தான் உள்ளது. இதைத் தடுக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் உள்ள கழிவறைகள் சுத்தமாக இல்லையெனில், அதனை புகைப்படம் எடுத்து, <>’ராஜ்மார்க் யாத்ரா’<<>> ஆப்பில் பதிவேற்றம் செய்தால், FAST TAG கணக்கிற்கு ரூ.1,000 வெகுமதியாக கிடைக்கும். உடனே இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News October 16, 2025

தருமபுரி: கடை உரிமையாளர்களுக்கு பறந்த உத்தரவு!

image

தருமபுரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு கடை உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு தரமான உணவுப்பொருட்களை விற்பனை செய்யுமாறும், உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற்று இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ் உத்தரவிட்டுள்ளார். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News October 16, 2025

தருமபுரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் நேற்று (அக்.15) வெளியிட்ட செய்தி குறிப்பில், ’வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை உள்ளிட்ட துறைகளில் ஸ்டார்ட் அப் தொழில் தொடங்குவோருக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். பயனாளிகள் தமிழ்நாடு தொடக்க மற்றும் புத்தாக்க இயக்கம் அல்லது ஸ்டார்ட் அப் இந்தியா கீழ் பதிவு செய்திருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!