News April 18, 2025

வேன் மீது கார் மோதி விபத்து பெண் உயிரிழப்பு

image

போச்சம்பள்ளி அடுத்த, காமாட்சிப்பட்டியை சேர்ந்த கோபிநாத் (42) குடும்பத்துடன் மாருதி 800 காரில் சுற்றுலா சென்று விட்டு திரும்பினார். அப்போது மத்துார் அருகே, கண்ணன்டஹள்ளியில், எதிரே வந்த ஈச்சர் வேன் மீது கார் மோதியது. இதில், காரிலிருந்த அவரது தாய் உமாராணி (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் இடிபாடுகளில் சிக்கிய கோபிநாத்தை 2 மணி நேரம் போராடி போலீசார் மீட்டனர்.

Similar News

News November 15, 2025

கிருஷ்ணகிரி: SIM CARD வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

இந்தியாவில் ஒருவர் 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க முடியும். எனவே, உங்கள் ஆதார் விவரங்களைப் பயன்படுத்தி வேறு யாராவது சிம் கார்டு வாங்கி இருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்க, இந்த <>லிங்கில்<<>> உங்கள் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் உள்நுழையலாம். உங்கள் பெயரில் உள்ள அனைத்து எண்களின் பட்டியலும் காட்டப்படும். அடையாளம் தெரியாத எண்கள் இருந்தால் உடனடியாகப் புகார் செய்து பிளாக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News November 15, 2025

கிருஷ்ணகிரி: கணவனை காணவில்லை என மனைவி புகார்!

image

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டினம் அடுத்த தேர்பட்டியை சேர்ந்தவர் மகா-விஷ்ணு (31). இவர் நேற்று முன்தினம் வெளியே சென்று வருவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் மகா-விஷ்ணு வீட்டிற்கு வரவில்லை. இதனால் கவலையடைந்த அவரது மனைவி, காவேரிபட்டணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 15, 2025

கிருஷ்ணகிரியில் இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

image

போச்சம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று (நவ.15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் போச்சம்பள்ளி சிப்காட், கல்லாவி, ஆனந்தூர், திருவனப்பட்டி, பாரண்டப்பள்ளி கிரிகேபள்ளி, சந்திராப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!