News March 27, 2025
வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்தால் நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனி வியாபாரிகள், வணிகா்கள் தா்ப்பூசணி, மாம்பழம், வாழைப்பழம் போன்ற கனிகளை செயற்கை வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்யக் கூடாது. கனிகளை விற்பனை செய்வோர் சட்ட விதிகளைப் பின்பற்றி உணவு வணிகத்தில் பதிவு அல்லது உரிமம் பெற்று காய்கனிகளை விற்பனை செய்ய வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் எச்சரித்துள்ளார்.
Similar News
News December 10, 2025
கிருஷ்ணகிரி வாக்காளர்களே இதை தெரிஞ்சிக்கோங்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தியமைத்தல் 2026 தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி நவ. 4 முதல் டிச 4 (நீட்டிப்பு டிச.11) வரை நடைபெறும். புதுப்பிப்பு, சேர்த்தல், நீக்கல் மனுக்கள் டிச. 9 முதல் ஜன. 8 வரை பெறப்படும். திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
News December 10, 2025
கிருஷ்ணகிரி அருகே பயங்கர விபத்து.. ஒருவர் பலி

கிருஷ்ணகிரி சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போத்தாபுரம் அருகே நேற்று (டிச.09) இரவு மணிகண்டன் என்பவர் வேலை முடித்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சாலையை கடக்க முயற்சித்த போது அதிவேகமாக வந்த ஐயப்ப பக்தர்கள் வாகனம் அவரை இடித்துச் சென்றது. அடிபட்டு கீழே விழுந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்யும் போது இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
News December 10, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.10) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!


