News March 27, 2025

வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்தால் நடவடிக்கை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனி வியாபாரிகள், வணிகா்கள் தா்ப்பூசணி, மாம்பழம், வாழைப்பழம் போன்ற கனிகளை செயற்கை வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்யக் கூடாது. கனிகளை விற்பனை செய்வோர் சட்ட விதிகளைப் பின்பற்றி உணவு வணிகத்தில் பதிவு அல்லது உரிமம் பெற்று காய்கனிகளை விற்பனை செய்ய வேண்டும். மீறினால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் எச்சரித்துள்ளார்.

Similar News

News December 12, 2025

கிருஷ்ணகிரி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!

News December 12, 2025

கிருஷ்ணகிரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

கிருஷ்ணகிரி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக் செய்து<<>> உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News December 12, 2025

கிருஷ்ணகிரி: டூவீலர் கம்பத்தில் மோதி 2 பேர் பலி!

image

ஓசூர் நெசவாளர் தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் சரண் இவரும் சென்னையை சேர்ந்த தினேஷ் ஆகிய இருவரும் இராயக்கோட்டையில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். நேற்று இருவரும் டூவீலரில் பணி முடிந்து ஓசூரை நோக்கி வந்தபோது, வரகானப்பள்ளி என்ற இடத்தில் இருந்த கம்பத்தின் மீது மோதி சரண் சம்பவ இடத்திலும், தினேஷ் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

error: Content is protected !!