News March 27, 2025
வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்தால் நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனி வியாபாரிகள், வணிகா்கள் தா்ப்பூசணி, மாம்பழம், வாழைப்பழம் போன்ற கனிகளை செயற்கை வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்யக் கூடாது. கனிகளை விற்பனை செய்வோர் சட்ட விதிகளைப் பின்பற்றி உணவு வணிகத்தில் பதிவு அல்லது உரிமம் பெற்று காய்கனிகளை விற்பனை செய்ய வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் எச்சரித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
கிருஷ்ணகிரி: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
▶️பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
▶️இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
▶️ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் (ம) ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE
News December 4, 2025
கிருஷ்ணகிரி: மர்ம கொலை… இரண்டு பேர் சரண்!

ஓசூர் அருகே மாரசந்திரம் கிராமத்தை சேர்ந்த ஹரிஷ் என்பவரை நேற்று இரவு மர்மநபர் நபர்கள் சிலரால் கொலை செய்யப்பட்டது தெரியவந்து. அப்பகுதியில் காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் நேற்று (டிச.3) மாலை 4 மணி அளவில் இரண்டு நபர்கள் தாங்கள் தான் ஹரிஷ் என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை செய்தோம் என்று ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
News December 4, 2025
கிருஷ்ணகிரி மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வந்த நிலையில், இன்று (டிச.04) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே இன்று வேலைக்கு மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் அதற்கு ஏற்றவாறு தங்களின் பயனத்தை அமைத்து கொள்ளவும். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*


