News March 27, 2025
வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்தால் நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனி வியாபாரிகள், வணிகா்கள் தா்ப்பூசணி, மாம்பழம், வாழைப்பழம் போன்ற கனிகளை செயற்கை வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்யக் கூடாது. கனிகளை விற்பனை செய்வோர் சட்ட விதிகளைப் பின்பற்றி உணவு வணிகத்தில் பதிவு அல்லது உரிமம் பெற்று காய்கனிகளை விற்பனை செய்ய வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் எச்சரித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
கிருஷ்ணகிரியில் தந்தை பெரியார் விருது அறிவிப்பு!

கிருஷ்ணகிரியில், தந்தை பெரியார் விருது 2025ற்கான அறிவிப்பு இன்று (டிச.04) வெளியிடப்பட்டுள்ளது. சமூக நீதிக்காக செயற்பட்டு வரும் நபர்களை கௌரவிக்கும் இந்த விருதுக்கு ரூ.5,00,000 பணத்தொகையும், தங்கப்பதக்கமும் வழங்கப்படும். இதற்கு பொதுநல பணிகள் & சமத்துவக் கொள்கைகள் முன்னெடுத்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தேவைப்படும் ஆவணங்களுடன் விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலகத்தில் வரும் டிச.18குள் சமர்ப்பிக்கலாம்.
News December 4, 2025
கிருஷ்ணகிரி: குடும்ப தகராறில் பெண் தற்கொலை!

கிருஷ்ணகிரி, கெலமங்கலம் அருகே வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார்.இவரது மனைவி காயத்ரி(25). திருமணமாகி 5 ஆண்டுகள் ஆனா நிலையில், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். யோதனால் விரக்தியடைந்த காயத்ரி, 6 மாதங்களுக்கு முன் தன் தாய் வீட்டிற்கு சென்றார். பின் அவர், நேற்று முன்தினம் வீட்டிலுள்ள 8 அடி தண்ணீர் தொட்டியில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார். இதனை, அப்பகுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 4, 2025
கிருஷ்ணகிரி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


