News April 22, 2025
வேதாரண்யம் – சென்னை நேரடி ரயில் தேவை

அகஸ்தியம் பள்ளி வேதாரண்யத்திலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு ரயில் கோச் மாறாமல் செல்லும் வகையில் நேரடி ரயில் போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என்று வேதாரண்யம் வர்த்தகர் சங்கத்தினர் தென்னக ரயில்வே திருச்சி கோட்ட பொது மேலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News October 16, 2025
நாகை: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நாகப்பட்டினம் மெய்கண்ட மூர்த்தி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு வரும் நவ.03-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நாகப்பட்டினம் மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு வரும் நவ.3-ம் தேதி மட்டும் ஒருநாள் உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், நவ.8 அன்று பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
நாகை: பாட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு!

நாகை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் அரசு நிர்ணயம் செய்துள்ள இந்த நேரத்தில் கூட்டாக பட்டாசுகளை வெடித்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News October 16, 2025
முஸ்லிம் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

2025-2026ம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 மாணவர்களுக்கு தலா ரூ.36 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க ரூ.3.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்திலுள்ள சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.