News March 25, 2024
வேட்புமனு தாக்கல் செய்த தமிழச்சி தங்க பாண்டியன்

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் சென்னை தெற்கு மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிட உள்ளார். இந்நிலையில் இன்று அவர் அடையாறு – பெருநகர சென்னை மாநகராட்சி தெற்கு வட்டாரத் துணை ஆணையர் அலுவலகத்தில் திமுக வேட்பாளராக போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்தார். உடன் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Similar News
News April 19, 2025
இயற்கை எழில் கொஞ்சும் தியாசபிகல் சொசைட்டி

அன்னிபெசன்ட் அம்மையாரால் 1875ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரம்மஞான சபையின் தலைமையகம் ‘தியாசபிகல் சொசைட்டி’ சென்னை அடையாறு பகுதியில் உள்ளது. சமத்துவத்தை போற்றும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த சபை, தற்போது இயற்கை எழில் கொஞ்சும் பூங்காவாகவும் விளங்குகிறது. உலகப் புகழ்பெற்ற அடையாறு ஆலமரமும் இந்த பூங்காவில் அமைந்துள்ளது. உயிர்களின் பல்லுயிர்த் தன்மைக்கு அடையாளமாகவும் இந்தப் பூங்கா திகழ்கிறது.
News April 19, 2025
பீக் ஹவரில் குடிநீர் லாரிகளுக்கு தடை

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்க, ‘பீக் ஹவர்’ நேரங்களில் குடிநீர் லாரிகள் சில பகுதிகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர், மணலி, மாதவரம் உள்ளிட்ட 6 மண்டலங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மண்டலங்களில் மாற்று வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. லாரிகள் GPS மூலம் கண்காணிக்கப்படும். குறிப்பாக, விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
News April 19, 2025
பெண்கள் உதவி மையத்தில் வேலை

ஒருங்கிணைந்த சேவை – பெண்கள் உதவி மையத்தில், தொகுப்பூதிய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.10,000 – ரூ.12,000 வழங்கப்படும். பாதுகாப்பாளர் பணிக்கு பள்ளிப்படிப்பு முடித்த ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். பன்முக உதவியாளர் பணிக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். இந்த <