News October 25, 2024
வேடந்தாங்கலில் பறவைகள் வரத்து தொடங்கியது

வேடந்தாங்கலில் தற்போது சீசன் களைகட்டியுள்ள நிலையில் பறவைகள் காணப்படுகின்றன. கொத்தி நாரை, சாம்பல் நாரை, புள்ளி மூக்கு வாத்து உள்ளிட்ட இரண்டாயிரத்துக்கும் மேல் பறவை இனங்கள் சரணாலயத்தில் வந்துள்ள நிலையில் FTC மூலம் விவசாயிகளுக்கு களப் பயிற்சிகள் அளிக்கவும் சரணாலயத்தை சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடுகள் செய்ய அரசு அதிகாரிகள் ஆவணங்கள் செய்ய வேண்டும் என்று உத்திரமேரூர் விவசாயிகள் கூறுகின்றனர்.
Similar News
News December 12, 2025
காஞ்சிபுரத்திலேயே சூப்பர் வேலை வாய்ப்பு! APPLY

காஞ்சிபுரம் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் மேனிபோல்ட் டெக்னீஷியன், ஈ.சி.ஜி.டெகினீஷியன், லிப்ட் மெக்கானிக், சைட்டோ டெக்னீஷியன், ஆக்குபேஷனல் தெரபிஸ்ட், பாய்லர் மெக்கானிக், இரத்தவங்கி ஆலோசகர், செவிலியர் உதவியாளர், சமையலாளர், சலவையாளர், டயட்டீஷியன், ரேடியோகிராபர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. விவரங்களுக்கு <
News December 12, 2025
காஞ்சிபுரம்: பைக் மோதி துடிதுடித்து பலி!

குன்றத்தூர் அடுத்த சோமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன்(50). கட்டடத் தொழிலாளியான இவர், நேற்று(டிச.11) மோட்டார் சைக்கிளில் குன்றத்தூரில் இருந்து சோமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, பூந்தண்டலம் பகுதியில் எதிரே வந்த ஏழுமலை(32) என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 12, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (டிச.11) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


