News April 16, 2024

வேடசந்தூர்: பேருந்து நிலையத்தில் முதியவர் மரணம்

image

வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு நேற்று தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் மற்றும் கிராம அலுவலர் இறந்தவரின் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 21, 2025

வடமதுரை அருகே பெண் விபரீத முடிவு!

image

திண்டுக்கல், வடமதுரை அருகே உள்ள தாமரைப்பாடி பகவதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை (38). இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்கு சிகிச்சை எடுத்தும் நோய் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த மணிமேகலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 21, 2025

திண்டுக்கல்: இரவு நேரம் ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் நேற்று (நவம்பர்.20) வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர, நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார்கள் உள்ளன. மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

News November 21, 2025

திண்டுக்கல்: இரவு நேரம் ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் நேற்று (நவம்பர்.20) வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர, நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார்கள் உள்ளன. மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!