News April 16, 2024

வேடசந்தூர்: பேருந்து நிலையத்தில் முதியவர் மரணம்

image

வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு நேற்று தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் மற்றும் கிராம அலுவலர் இறந்தவரின் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 27, 2025

திண்டுக்கல்: ரோடு சரியில்லையா? இத பண்ணுங்க!

image

திண்டுக்கல் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <>Namma Saalai <<>>செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் எதுவாயினும் விரைந்து சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

News November 27, 2025

திண்டுக்கல் அருகே பரபரப்பு.. சிக்கிய 2 பேர்!

image

மதுரை மண்டல மத்திய நுண்ணறிவு போலீசார் திண்டுக்கல், செம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக 3 பேர் சுற்றித்திரிந்த‌னர். போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற இளைஞர்களை பிடித்து விசாரித்ததில் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. தொடர்ந்து கணேஷ், சந்தோஷ்குமார் இருவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, பழனி மதுவிலக்கு காவல்நிலையம் அழைத்துவந்து வழக்குப் பதிவு செய்தனர்.

News November 27, 2025

திண்டுக்கல்: டிகிரி இருந்தால் BOI வங்கியில் வேலை!

image

திண்டுக்கல் மக்களே, பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் (BOI), காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு https://bankofindia.bank.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க நவம்பர் 30-ம் தேதி கடைசி ஆகும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!