News January 24, 2025

வேங்கை வயல் விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் மூன்று பேருக்கு தொடர்புள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இதில் முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை பழி வாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

Similar News

News January 7, 2026

புதுக்கோட்டை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

கீரனூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட கீரனூர், விராலிமலை, குன்றாண்டார்கோவில், கிள்ளுக்கோட்டை, மாத்தூர், தொண்டைமான் நல்லூர் ஆகிய பகுதிகளுக்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை கீரனூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. புதுகை மேற்பார்வை பொறியாளர் பொன் ஜெயமேரி தலைமையில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கூட்டம் நடைபெறும். இதில், பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்கலாம். SHARE IT

News January 7, 2026

புதுக்கோட்டை: இன்று இங்கெல்லாம் மின்தடை!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம், அலியானிலை, தல்லாம்பட்டி, அறந்தாங்கி, மறமடக்கி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.07) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அரிமளம், அலியானிலை, தல்லாம்பட்டி, அறந்தாங்கி, மறமடக்கி ஆகிய பகுதிகள் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 7, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில், நேற்று ஜன.6 இரவு 10 மணி முதல் இன்று(ஜன.7) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!