News April 14, 2024
வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் மூச்சு திணறி பலி

கோவை மாவட்டத்தின் அடையாளங்களாக ஏராளமான இடங்கள் உள்ளன. ஆனால், வெளியூர் மக்களும் விரும்பும் ஓர் இடம் வெள்ளியங்கிரி மலை. இந்நிலையில், கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய கோவை போத்தனூரை சேர்ந்த சீனிவாசன் என்ற பக்தர் இன்று முதல் மலை ஏறிக்கொண்டிருக்கும் போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த 2 மாதங்களில் வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்கள் 7 பேர் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர்.
Similar News
News December 20, 2025
தற்கொலை தலைநகரமாக இருக்கிறது தமிழகம்: ஆர்.என்.ரவி

கோவையில் ‘சிந்து சரஸ்வதி நாகரிகம்’ என்ற தலைப்பில் இருநாள் மாநாடு, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகையில், இந்தியாவில் தற்கொலை தலைநகரமாக தமிழகம் உள்ளது என்றும், பாரதத்தின் தொன்மையான நாகரிகம் சரஸ்வதி நதிக்கரையோரம் தான் உருவானது என்றார்.
News December 20, 2025
பொள்ளாச்சிக்கு பெருமை சேர்த்த பெண்

சர்வதேச வாலிபால், ஆசிய வாலிபால் கூட்டமைப்பு சார்பில், உஸ்பெகிஸ்தானில் சர்வ தேச வாலிபால் நடுவர் தேர்வு நடந்தது. இந்தியா சார்பில் 3 பேர் உட் பட சர்வதேச அளவில் 22 பேர் பங்கேற்றனர். இதில் சிறப்பாக செயல் பட்ட தமிழகத்தின் பொள்ளாச்சியை சேர்ந்த பவித்ரா(30) நடுவரானார். தமிழகத்தின் முதல் பெண் சர்வதேச வாலிபால் போட்டியில் நடுவர் என பெருமை பெற்றார்.
News December 20, 2025
கோவை: SI தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

1) கோவை மாவட்டத்தில் நாளை (டிச.21) SI தேர்வு நடைபெறவுள்ளது.
2) தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
3) ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
4) 2 தேர்வு என்பதால் முதலில் காலை 8 மணிக்கு அறிக்கை நேரம். பின், பிற்பகல் 2 மணி அறிக்கை நேரமாகும்.
5) வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
(SI தேர்வுஎழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)


