News April 19, 2025
வெள்ளியங்கிரி மலையில் ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடியைச் சேர்ந்த புவனேஷ்வரன் (18) என்ற இளைஞர், கோவை, வெள்ளிங்கிரி மலையில் ஏழாவது மலையில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, நேற்றிரவு கீழே இறங்கியுள்ளார். அப்போது கால் தவறி கீழே சரிந்த அவர், 10 மீட்டர் ஆழத்தில் உருண்டு விழுந்துள்ளார். உடனடியாக டோலி பாரம் தூக்கும் பணியாளர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News December 6, 2025
கிணத்துக்கடவு அருகே பயங்கர விபத்து: மாணவர் பலி

கிணத்துக்கடவு அருகே லாரி மீது பைக் மோதியதில் பைக்கில் சென்ற 4 கல்லூரி மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு கோவை மற்றும் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதில், ஜெகன் (21) என்ற மாணவன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இவ்விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
News December 5, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (05.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 5, 2025
CLARIFICATION: தவறுதலாக இடம்பெற்ற MLA புகைப்படம்

சேலம் காமனேரியில், மூதாட்டி ஒருவரை முன்னாள் MLA அர்ஜுனன் தாக்கியதாக ஒரு செய்தி நேற்று வெளியானது. அப்போது அந்த வீடியோவுடன், தற்போது கோவை வடக்கு MLA-வான அம்மன் K.அர்ஜுனன் படம் தவறுதலாக பதிவிடப்பட்டு பின் நீக்கப்பட்டது. செய்திகளை கவனமுடன் பதிவிட்டும் இந்த தவறு நிகழ்ந்ததற்காக வருந்துகிறோம். மேற்கண்ட சம்பவத்துக்கும் MLA அம்மன் K.அர்ஜுனனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


