News April 12, 2025

வெள்ளிங்கிரியில் மூச்சு திணறி ஒருவர் உயிரிழப்பு

image

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை வெள்ளியங்கிரி மலையேறும் போது காஞ்சிபுரத்தை சேர்ந்த ரமேஷ் (42) மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார். 6 வது மலை அருகே நேற்று அதிகாலை வரும் போது அவர் மயங்கி விழுந்துள்ளார். அவர் உடல் கீழே கொண்டு வரப்பட்டது.

Similar News

News November 18, 2025

கோவையில் வசமாக சிக்கிய நேபாள சிறுவன்!

image

கோவை கிணத்துக்கடவு அடுத்துள்ள நெகமம் பொள்ளாச்சி – பல்லடம் சாலையில் பிரகாஷ் என்பவர் மரக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடையை பூட்டிவிட்டு நேற்று வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.25000 திருடு போனது தெரிய வந்தது. இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த நெகமம் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 17 வயது நேபாள சிறுவனை கைது செய்தனர்.

News November 18, 2025

கோவையில் வசமாக சிக்கிய நேபாள சிறுவன்!

image

கோவை கிணத்துக்கடவு அடுத்துள்ள நெகமம் பொள்ளாச்சி – பல்லடம் சாலையில் பிரகாஷ் என்பவர் மரக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடையை பூட்டிவிட்டு நேற்று வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.25000 திருடு போனது தெரிய வந்தது. இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த நெகமம் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 17 வயது நேபாள சிறுவனை கைது செய்தனர்.

News November 18, 2025

கோவை: மட்டன் கடைக்குள் புகுந்த கார் மோதி மூதாட்டி பலி!

image

கோவை பாப்பம்பட்டி பிரிவை சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் அருண் பிரகாஷ் நேற்று காரில் வாடிக்கையாளர்களுடன் நரசிம்மநாயக்கன்பாளையம் புதுப்பாளையம் சாலையில் சென்றுள்ளார். அப்போது, அவருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மட்டன் கடைக்குள் புகுந்தது.இந்த விபத்தில் மூதாட்டி சின்னம்மாள் என்பவர் உயிரிழந்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!