News April 12, 2025
வெள்ளிங்கிரியில் மூச்சு திணறி ஒருவர் உயிரிழப்பு

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை வெள்ளியங்கிரி மலையேறும் போது காஞ்சிபுரத்தை சேர்ந்த ரமேஷ் (42) மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார். 6 வது மலை அருகே நேற்று அதிகாலை வரும் போது அவர் மயங்கி விழுந்துள்ளார். அவர் உடல் கீழே கொண்டு வரப்பட்டது.
Similar News
News September 16, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (செப்.16) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
News September 16, 2025
கோவை: தேர்வில்லாமல் அரசு வேலை!

கோவை மக்களே, எழுத்துத் தேர்வு இல்லாமல், தமிழ்நாடு அரசின் எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலான ஊதியத்தில் 56 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 19.09.2025 தேதிக்குள் <
News September 16, 2025
கோவை செங்குளத்தில் மூழ்கி பலி

கோவை குனியமுத்தூர் செங்குளத்தில் நேற்று முன்தினம் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை ஜிஎச் அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.