News December 4, 2024

வெள்ளம் பாதித்த 151 இடங்களில் தூய்மை பணி

image

கடலூரில் வெள்ளம் பாதித்த 16 ஊராட்சிகளை சேர்ந்த 66 உட்கடை கிராமங்கள், அண்ணாகிராமத்தில் 17 ஊராட்சிகளை சேர்ந்த 57 உட்கடை கிராமங்கள், பண்ருட்டியில் 7 ஊராட்சிகளை சேர்ந்த 28 உட்கடை கிராமங்கள் என மொத்தம் 40 ஊராட்சிகளை சேர்ந்த 151 இடங்களில் 2,045 தூய்மைப் பணியாளர்கள் மூலம் 361 கிலோ பிளிச்சங் பவுடர் தெளித்து தூய்மை பணி நடந்தது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News November 28, 2025

கடலூர் மாவட்டத்தை புரட்டி போட போகும் புயல்..

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது கடலூர் மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் நாளை (நவ.29) பலத்த சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 28, 2025

கடலூர்: புயல் அவசர உதவி எண்கள்!

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழை / புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம் 1070, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் 1077 அழைத்தால் போதும், உடனடியாக உதவி அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News November 28, 2025

கடலூர்: வாலிபர் குண்டாசில் கைது

image

காட்டுமன்னார்கோயில் பகுதியை சேர்ந்த அறிவழகன் (29) என்பவரை அங்காளம்மன் கோயில் தெரு சஞ்சய் (23) கத்தியால் தாக்கி கொலை முயற்சி செய்தது சம்பந்தமாக காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இவரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி.பரிந்துரையில் சஞ்சயை குண்டர் சட்டத்தில் அடைக்க இன்று (நவ.27) உத்தரவிட்டார்.

error: Content is protected !!