News December 4, 2024
வெள்ளம் பாதித்த 151 இடங்களில் தூய்மை பணி

கடலூரில் வெள்ளம் பாதித்த 16 ஊராட்சிகளை சேர்ந்த 66 உட்கடை கிராமங்கள், அண்ணாகிராமத்தில் 17 ஊராட்சிகளை சேர்ந்த 57 உட்கடை கிராமங்கள், பண்ருட்டியில் 7 ஊராட்சிகளை சேர்ந்த 28 உட்கடை கிராமங்கள் என மொத்தம் 40 ஊராட்சிகளை சேர்ந்த 151 இடங்களில் 2,045 தூய்மைப் பணியாளர்கள் மூலம் 361 கிலோ பிளிச்சங் பவுடர் தெளித்து தூய்மை பணி நடந்தது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News December 23, 2025
கடலூர்: கார்கள் மோதி விபத்து-இருவர் பலி!

ரெட்டிச்சாவடி அடுத்த கிளிஞ்சிகுப்பத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (63). இவர் உறவினர் 6 பேருடன் நேற்று உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு காரில் மேல்அழிஞ்சிப்பட்டு பகுதியில் சென்றபோது அவ்வழியாக வந்த காரும், இவர்கள் சென்ற காரும் நேருக்கு நேர் மோதின. இதில் புஷ்பராஜ் மற்றும் மஞ்சுளா(42) என்பவரும் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 22, 2025
கடலூர்: அதிசய கிணறு கொண்ட பெருமாள் கோயில்!

கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் தேவநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆதிசேஷன் கிணறு உள்ளது. பெருமாளுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டபோது, ஆதிசேஷன் தன் வாலால் பூமியைப் பிளந்து, நீரூற்றை ஏற்படுத்தி பெருமாள் தாகத்தை தணித்தார் என சொல்லப்படுகிறது. இந்த கிணறு இன்றும் கோயிலில் உள்ளது. இது ஒரு பிரார்த்தனை கிணறாகவும் கருதப்படுகிறது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 22, 2025
கடலூர்: SBI வங்கியில் வேலை; கடைசி வாய்ப்பு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: வருடம் ரூ.6.20 லட்சம்
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 23.12.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


