News December 4, 2024

வெள்ளம் பாதித்த 151 இடங்களில் தூய்மை பணி

image

கடலூரில் வெள்ளம் பாதித்த 16 ஊராட்சிகளை சேர்ந்த 66 உட்கடை கிராமங்கள், அண்ணாகிராமத்தில் 17 ஊராட்சிகளை சேர்ந்த 57 உட்கடை கிராமங்கள், பண்ருட்டியில் 7 ஊராட்சிகளை சேர்ந்த 28 உட்கடை கிராமங்கள் என மொத்தம் 40 ஊராட்சிகளை சேர்ந்த 151 இடங்களில் 2,045 தூய்மைப் பணியாளர்கள் மூலம் 361 கிலோ பிளிச்சங் பவுடர் தெளித்து தூய்மை பணி நடந்தது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News December 9, 2025

கடலூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

image

கடலுார் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் வரும் டிச.13-ம் தேதி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை, அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், வட்ட வழங்கல் பிரிவில் நடைபெற உள்ளது. இம்முகாமில், ரேஷன் கடை மற்றும் பொருட்கள் சார்ந்த குறைகள்/புகார்களை மக்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்தியா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

கடலூர்: நகை திருடிய தாய் – மகள் கைது

image

ராமநத்தம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சித்ரா (45). இவர் தன் வீட்டில் வைத்திருந்த 9 1/4 பவுன் தங்க நகையை காணவில்லை என ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், சித்ராவின் வீட்டில் வாடகைக்கு இருந்த பவுனாம்பாள் (46), அவரது மகள் ஸ்வேதா (24) ஆகியோர் பீரோவை திறந்து நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், நகைகளை மீட்டனர்.

News December 9, 2025

கடலூர்: வயலில் பிணமாக கிடந்த நபர்

image

ஒரத்தூர் அடுத்த வடகரிராஜபுரத்தை சேர்ந்தவர் தொழிலாளி ராஜமோகன்(42). இவர் நேற்று தாதாம்பேட்டை அய்யனார் கோயில் எதிரில் உள்ள வயலில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஒரத்தூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஒரத்தூர் போலீசார் வழக்குபதிந்து, ராஜமோகன் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!