News December 4, 2024

வெள்ளத்தில் 14 பேர் இதுவரை உயிரிழப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக, வெள்ளம் ஏற்பட்டது. இதனால், விக்கிரவாண்டி வட்டத்தில் 6 பேர், விழுப்புரம் வட்டத்தில் 5 பேர், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்தில் 2 பேர், வானூர் வட்டத்தில் ஒருவர் என இதுவரை 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மாவட்டத்தில் வெள்ளத்தால் 26 சாலைகள் சேதமடைந்த நிலையில், 17 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும்.

Similar News

News December 13, 2025

விழுப்புரம்: g-pay பயனாளர்களே இந்த Trick தெரிஞ்சிக்கோங்க!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News December 13, 2025

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல் நிலை சரிபார்ப்பு

image

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில் பெல் நிறுவன பொறியாளர்களால் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல் நிலை சரிபார்ப்புக்கு உட்படுத்தும் பணியினை விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (டிச.13) நேரில் பார்வையிட்டார்.

News December 13, 2025

விழுப்புரத்தில் தொழிற்கடன் விழிப்புணர்வு முகாம்

image

தொழிற்கடன் விழிப்புணர்வு முகாம் (டிச.17) காலை 10 மணியளவில் ASG மஹால், புதிய பேருந்து நிலையம் எதிரில், சுதாகர் நகர், விழுப்புரத்தில் நடத்தப்படவுள்ளது. இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு மாவட்டத் தொழில் மையம், மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம், நேரடியாகவோ 9443728015 / 8925534035 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!