News December 4, 2024
வெள்ளத்தில் 14 பேர் இதுவரை உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக, வெள்ளம் ஏற்பட்டது. இதனால், விக்கிரவாண்டி வட்டத்தில் 6 பேர், விழுப்புரம் வட்டத்தில் 5 பேர், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்தில் 2 பேர், வானூர் வட்டத்தில் ஒருவர் என இதுவரை 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மாவட்டத்தில் வெள்ளத்தால் 26 சாலைகள் சேதமடைந்த நிலையில், 17 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும்.
Similar News
News October 22, 2025
விழுப்புரம் மாவட்டத்திற்கு உதவி எண்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், பழைய கட்டிடங்கள், தாழ்வான பகுதிகள், நீர்நிலைகளை ஒட்டி வசிப்பவர்களை அருகிலுள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்க உதவுமாறு காவல்துறை இளைஞர்கள், தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அவசர உதவிக்கு 1077 (பேரிடர் உதவி), 04146 223265 (மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை) என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 22, 2025
விழுப்புரம் மாவட்டம் மழை நிலவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்தது, இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை அளவு விழுப்புரம் 168 மில்லி மீட்டர் கோலியனூர் 100 மில்லி மீட்டர் வளவனூர் 106 மில்லி மீட்டர் கெடார் 115 மில்லி மீட்டர் முண்டியம்பாக்கம் 95 மில்லி மீட்டர் வானூர் 184 மில்லி மீட்டர் திண்டிவனம் 103 மில்லி மீட்டர் செஞ்சி 123 மில்லி மீட்டர் வளத்தி 84 மில்லி மீட்டர். இன்றும் மழை இருக்கும்.
News October 22, 2025
விழுப்புரம்: இயற்கை இடர்பாடுகளை சீரமைக்க மாவட்ட சேர்மன் ஏற்பாடு

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்படும் இயற்கை இடர்பாடுகளை சீரமைக்க கட்டணமில்லா ஜே.சி.பியை விழுப்புரம் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்து நேற்றிரவு (அக்.21) அவர் வெளியிட்ட அறிக்கையில்; விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதால், இயற்கை இடர்பாடுகளை சீரமைக்க ஜேசிபி மற்றும் தண்ணீர் டேங்குகளை கட்டணமின்றி பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.