News December 5, 2024

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10,879 பேருக்கு பால் பாக்கெட்

image

ஃபெஞ்சல் புயலின் காரணமாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு 35 முகாம்களில் 19,654 நபர்கள் தங்கவைக்கப்பட்டனர். இவர்களுக்கு 15 இடங்களில் சமையல் கூடம் ஏற்படுத்தி உணவு தயாரிக்கப்பட்டு தினந்தோறும் 3 வேளை 88,650 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 10,879 நபர்களுக்கு பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது என கடலூர் கலெக்டர் தகவல் அளித்துள்ளார்.

Similar News

News November 23, 2025

கடலூர்: தப்பி ஓடிய குற்றவாளிக்கு காலில் மாவு கட்டு

image

கடலூர், தோப்புக்கொல்லை சேர்ந்தவர் கவி (எ) கவியரசன்(26). இவர் கஞ்சா வழக்கு மற்றும் பெண்ணை தாக்கிய வழக்குகளில் தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில் வார சந்தையின் பின்புறம் உள்ள, என்.எல். சி தைலம் தோப்பில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்ற நெய்வேலி போலீசார் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடியதில் வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டதில், அவருக்கு சிகிச்சையளித்து சிறையில் அடைத்தனர்.

News November 23, 2025

கடலூர்: பெண் தவறி விழுந்து உயிரிழப்பு

image

கடலூர் முதுநகர் அடுத்த கோதண்டராமபுரத்தை சேர்ந்தவர் சாந்தி(47). இவர் தனது வீட்டின் அருகில் தவறிகீழே விழுந்ததில் வயிற்றில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 23, 2025

இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் (நவ.22) இரவு 10 மணி முதல் (நவ.23) காலை 6 மணி வரை கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாதோப்பு, ஆகிய உட்கோட்டங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!