News December 5, 2024
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10,879 பேருக்கு பால் பாக்கெட்

ஃபெஞ்சல் புயலின் காரணமாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு 35 முகாம்களில் 19,654 நபர்கள் தங்கவைக்கப்பட்டனர். இவர்களுக்கு 15 இடங்களில் சமையல் கூடம் ஏற்படுத்தி உணவு தயாரிக்கப்பட்டு தினந்தோறும் 3 வேளை 88,650 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 10,879 நபர்களுக்கு பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது என கடலூர் கலெக்டர் தகவல் அளித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
கடலூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 1, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் டிசம்பர் மாதம் தொடங்கி, பிப்ரவரி மாதம் வரை வாரந்தோறும் சனிக்கிழமை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 28 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் (நவ.30) தெரிவித்துள்ளார். இதில், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான UDID அட்டை உள்ளிட்ட பல்வேறு தேவைகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 1, 2025
கடலூர்: இளம்பெண் தலை துண்டித்து படுகொலை

காட்டுக்கூடலுாரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி தமிழரசி (35). இவர், தன் கணவரின் தம்பிகள் இருவரும் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக சிதம்பரம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் முருகானந்தம் என்பவரை கைது செய்த நிலையில், மற்றொரு தம்பியான பாலகிருஷ்ணன் ஆத்திரத்தில் நேற்று (நவ.30) தமிழரசியை தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசாரை அவரை கைது செய்தனர்.


