News December 5, 2024

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10,879 பேருக்கு பால் பாக்கெட்

image

ஃபெஞ்சல் புயலின் காரணமாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு 35 முகாம்களில் 19,654 நபர்கள் தங்கவைக்கப்பட்டனர். இவர்களுக்கு 15 இடங்களில் சமையல் கூடம் ஏற்படுத்தி உணவு தயாரிக்கப்பட்டு தினந்தோறும் 3 வேளை 88,650 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 10,879 நபர்களுக்கு பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது என கடலூர் கலெக்டர் தகவல் அளித்துள்ளார்.

Similar News

News December 1, 2025

கடலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கடலூர் மாவட்ட மக்களே, உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News December 1, 2025

கடலூர்: தொடர் மழையால் நிரம்பிய 31 ஏரிகள்

image

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயலின் காரணமாக அடிக்கடி கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் 228 ஏரிகள் உள்ள நிலையில், மழையின் காரணமாக 31 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. மேலும் 50 ஏரிகளில் 76 – 99 சதவீதம் வரை நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

News December 1, 2025

கடலூர் மாவட்டத்தில் 245.6 மி.மீ மழை பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது‌. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 01) காலை 8.30 மணி நிலவரப்படி, அண்ணாமலை நகரில் 36 மில்லி மீட்டர் மழை, சிதம்பரம் 26 மி.மீ மழை, பரங்கிப்பேட்டை 25.4 மி.மீ மழை, சேத்தியாத்தோப்பு 19.2 மி.மீ மழை, புவனகிரி 19 மில்லி மீட்டர் மழை என மாவட்டம் முழுவதும் 245.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது

error: Content is protected !!