News March 4, 2025

வெளியூர் செல்வோருக்கு திருச்சி காவல் துறையினர் எச்சரிக்கை!

image

வீட்டை பூட்டிவிட்டு நீண்ட நாட்கள் வெளியூர் செல்லுவோர் குறித்து காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் வெளியே செல்வோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கவும். பணம், நகை போன்ற பொருட்களை வங்கி லாக்கரில் வைத்துவிட்டு செல்வது பாதுகாப்பானது. சாவியை வீட்டில் உள்ள இடங்களிலேயே வைத்துவிட்டு செல்வதை தவிர்க்கவும் என்று பொது மக்களுக்கு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News September 13, 2025

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்திலிருந்து வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல விரும்பும் நபர்கள் இந்திய அரசின் <>https://emigrate.gov.in<<>> என்ற தளத்தில் பதிவு செய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும். வெளிநாட்டு வேலை தொடர்பான சந்தேகங்களுக்கு அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறையின் கட்டணமில்லா உதவி மையத்தை (1800 309 3793) தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News September 13, 2025

திருச்சி: ரூ.3 லட்சம் சம்பளத்தில் ஜெர்மனியில் வேலை

image

ஜெர்மனி நாட்டில் வேலைவாய்ப்பை பெறும் வகையில், ஜெர்மன் மொழி தேர்விற்கான இலவச பயிற்சி தாட்கோ சார்பில் அளிக்கப்படுகிறது. இதற்கு Nursing / B.E / B.Tech முடித்த, 35 வயதுக்கு உட்பட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின வகுப்புகளை சேர்ந்த நபர்கள், <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பிறகு மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பளத்தில் பணி வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

News September 13, 2025

திருச்சியில் இன்று களமிறங்கும் விஜய்!

image

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை திருச்சியில் இருந்து இன்று (செப்.13) தொடங்க உள்ளார். திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே காலை 10.30 மணியளவில் மக்களை சந்திக்கும் அவர், திருச்சி மாவட்டத்தின் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த உங்கள் கருத்தை கமெண்ட் செய்யவும். SHARE NOW!

error: Content is protected !!