News November 24, 2024
வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

திருச்சியில் இருந்து துபாய்க்கு செல்லும் பயணிகளை இன்று டிஆர்ஐ திருச்சி & சிஐயு, அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஸ்ரீ ஹமீத் பாசித் மற்றும் சிங்கப்பூர் செல்லும் ஸ்ரீ முகமது முஸ்தபா ஆகிய இரண்டு பயணிகளின் உடைமையில் ரூ.11,14,556/- & ரூ.12,26,900/- மதிப்புள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 13, 2025
திருச்சி: 4370 மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கல்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில், 4370 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
திருச்சி மக்களே உடனடி தீர்வு வேண்டுமா?

திருச்சி மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <
News December 13, 2025
திருச்சி – காரைக்கால் இடையே வழக்கம் போல் ரயில் இயக்கம்!

திருச்சி – காரைக்கால் இடையே இயக்கப்படும் டெமுரெயில் (வண்டி எண் : 76820) வருகிற 14, 16 மற்றும் 18ஆம் தேதிகளில் தஞ்சாவூர்- காரைக்கால் இடையே பகுதியாக இயங்காது என அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்த ரெயில் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்க மாக காரைக்காலில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்படும் டெமு ரெயில் (வண்டி எண்: 76819) மேற்கண்ட நாட்களில் வழக்கமான அட்டவணைப்படியே இயங்கும்.


