News November 24, 2024
வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

திருச்சியில் இருந்து துபாய்க்கு செல்லும் பயணிகளை இன்று டிஆர்ஐ திருச்சி & சிஐயு, அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஸ்ரீ ஹமீத் பாசித் மற்றும் சிங்கப்பூர் செல்லும் ஸ்ரீ முகமது முஸ்தபா ஆகிய இரண்டு பயணிகளின் உடைமையில் ரூ.11,14,556/- & ரூ.12,26,900/- மதிப்புள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 17, 2025
திருச்சி: மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டுகோள்

தீபாவளி தினத்தன்று உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கடந்தாண்டை போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மாசற்ற வகையில் தீபாவளியை கொண்டாட வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News October 16, 2025
மணப்பாறை: வேளாண்மை அலுவலகத்தில் ஆய்வு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அமைந்துள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சரவணன் இன்று நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வேளாண்மை அலுவலகத்தின் செயல்பாடுகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் மோகனா, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சிவராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News October 16, 2025
திருச்சி: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

திருச்சி மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!