News April 29, 2025

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1.65 கோடி மோசடி

image

வடசேரி பகுதியைச் சேர்ந்தவர் மோகன் சாம்ராஜ். இவர் வடசேரி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் தீபக் பாலன் உட்பட மூன்று பேர் 1.65 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதில் தானும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். விழிப்புணர்வுடன் செயல்படுங்கள் *நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்*

Similar News

News December 6, 2025

குமரி: பாஜக சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம்

image

நாகர்கோவில் அருள்மிகு தழுவிய மகாதேவர் ஆலய தெப்பக்குளத்தை சீர் செய்ய நிதி இல்லை என காரணம் கூறிய அறநிலைய துறையை கண்டித்து நாகர்கோவில் வடக்கு மண்டல பாஜக சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம் கோவில் வளாகத்தில் இன்று (டிச-6) நடைபெற்றது. வடக்கு மண்டல பாஜக தலைவர் சுனில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News December 6, 2025

குமரி: B.E. முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

குமரி மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.40,000 – ரூ.1,40,000 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE

News December 6, 2025

குமரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

குமரி மாவட்ட மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!