News March 25, 2025
வெப்ப அலை தாக்கம் அதிகரிப்பு குறித்து தற்காப்பு முன்னெச்சரிக்கை

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் பொதுமக்கள் நண்பகல் 12:00 மணி முதல் மூன்று மணி வரை அத்தியாவசியமான தேவை இன்றி வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம் வெப்பத்தினால் ஏற்படும் அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சைகளை அளிக்க அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது என்றார்.
Similar News
News November 28, 2025
புதுச்சேரியை புரட்டி போட போகும் புயல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி வருகிறது. இது புதுச்சேரியை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதுச்சேரியில் நாளை (நவ.29) பலத்த சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 28, 2025
புதுச்சேரி: குடிநீர் தடை அறிவிப்பு!

புதுச்சேரி, பொதுசுகாதார செயற்பொறியாளர் வெளியிட்ட செய்தியில், தனகோடி நகர் மற்றும் தர்மாபுரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நாளை 29ம் தேதியும், குருமாம்பேட் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில், வரும் 1ம் தேதியும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நாளை தனகோடி நகர், தர்மாபரி, லெனின் வீதி, சபரி நகர், பகுதிகளிலும், வரும் 1ம் தேதி குருமாம்பேட் பகுதியிலும் குடிநீர் தடைபடும் தெரிவித்தாரர்.
News November 28, 2025
புதுச்சேரி: சூறாவளிக்காற்று எச்சரிக்கை

புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்தியில், குமரிக்கடல் பகுதிகளில் இன்று 28ம் தேதி முதல் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்தனர்.


