News March 28, 2025

வெட்டப்பட்ட தலையுடன் காவல்நிலையம் சென்ற பெண்!

image

நாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி(31) விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வந்த ஆடுகளில் ஒன்று காணாமல் போய் உள்ளது. இதனை அடுத்து, காணாமல் போன ஆட்டினை கறிக்கடையில் கண்டெடுத்த பூங்கொடி ஆட்டின் தலையுடன் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

Similar News

News December 22, 2025

நாகை: கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில் அறிவிப்பு

image

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு ரயிலானது செகந்தராபாத்திலிருந்து (ஐதராபாத்) நாளை (டிச.23) இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு சென்னை, விழுப்புரம், காரைக்கால், நாகூா், நாகை வழியாக டிச.24 மாலை 5.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமாா்கத்தில் வேளாங்கண்ணியிலிருந்து டிச.25 அன்று காலை 8 மணிக்கு புறப்பட்டு, அதே வழியில் டிச.26 காலை 6.10 மணிக்கு செகந்தராபாத் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 22, 2025

நாகை: கோடி கணக்கில் போதை பொருள் கடத்தல்!

image

இலங்கைக்கு போதை பொருள் கடத்தப்பட உள்ளதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வேளாங்கண்ணி பேராலய காா் நிறுத்தும் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த ரவிச்சந்திரன் (40), ஆனந்தராஜ் (33), காஞ்சிநாதன் (31) ஆகியோரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் ரூ.6 கோடி மதிப்புள்ள 2 கிலோ மெஸ்கலின் என்ற போதைப் பொருள் இருந்துள்ளது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

News December 22, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.21) இரவு 10 மணி முதல் இன்று (டிச.22) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!