News March 29, 2024
வெடித்து சிதறிய சிலிண்டர்கள்: பணிகள் தீவிரம்

ஆரணியில் பிரபல பேக்கரியில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், குடோனில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்களை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
Similar News
News July 9, 2025
தி.மலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப்படும் தொகுதி-4 தோ்வுக்காக தி.மலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் நேற்று (ஜூலை 08) செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, உதவி இயக்குநா் (நில அளவை) சண்முகம், வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News July 9, 2025
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? (1/2)

தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தி.மலையில் 103 பணியிடங்கள் உள்ளன. குறைந்தபட்சம் 10th வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-ரூ.35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆக.,4-க்குள் விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு (04175 233 381) தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க. <<17002051>>தொடர்ச்சி<<>>
News July 9, 2025
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? (2/2)

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
▶️கட்டாயம் மொழிப்பாடமாக தமிழை படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்.
▶️மேலும் தகவலுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் / உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!