News January 2, 2025
வீரவநல்லூர் பூமிநாதர் கோவிலில் திருவாதிரை திருவிழா

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் மரகதாம்பிகை உடனுறை பூமிநாதர் சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா வரும் 4ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. 10ம் தேதி காலை 7:00 மணிக்கு நடராஜர் காப்பு கட்டு, இரவு 7.45 மணிக்கு நடராஜர் சிகப்பு சாத்தி பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளல் நடக்கிறது. 12ம் தேதி அதிகாலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 13ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
Similar News
News December 4, 2025
நெல்லையில் அரசு வேலை! உடனே APPLY

திருநெல்வேலி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் காலியாக உள்ள MIS analyst என்கிற வெளி ஆதார முறைகளான ஒரு தற்காலிக பணியிடத்திற்கு மாதம் 25,000 ஊதியத்தில் பணியாற்ற வாய்ப்பு உள்ளது. பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மென் பொறியாளர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
News December 4, 2025
நெல்லை: Ex ராணுவ வீரரை சரமாரியாக தாக்கிய தந்தை, மகன்

விகேபுரம் அருகே முதலியார்பட்டியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் செல்வம் (47) என்பவரை, இடப் பிரச்னை காரணமாக அதே ஊர் தர்மர் மற்றும் அவரது மகன் ஆதிலட்சுமணன் (27) ஆகியோர் நேற்று சரமாரியாகத் தாக்கினர். படுகாயமடைந்த செல்வம் நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விகேபுரம் போலீசார் தர்மர் மற்றும் ஆதிலட்சுமணனை கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
News December 4, 2025
திருநெல்வேலி மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச 4) நெல்லை, ராமநாதபுரம்,. தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.


