News January 2, 2025

வீரவநல்லூர் பூமிநாதர் கோவிலில் திருவாதிரை திருவிழா

image

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் மரகதாம்பிகை உடனுறை பூமிநாதர் சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா வரும் 4ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. 10ம் தேதி காலை 7:00 மணிக்கு நடராஜர் காப்பு கட்டு, இரவு 7.45 மணிக்கு நடராஜர் சிகப்பு சாத்தி பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளல் நடக்கிறது. 12ம் தேதி அதிகாலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 13ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

Similar News

News December 6, 2025

நெல்லை: விவசாயி விஷம் குடித்து தற்கொலை

image

சீவலப்பேரி பொட்டல் பச்சேரி பகுதியை சேர்ந்த அந்தோனி மகன் மிக்கேல் (47). விவசாயியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இவரை மீட்ட உறவினர்கள் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சீவலப்பேரி போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

News December 6, 2025

நெல்லை: கரண்ட் கட்? இனி Whatsapp மூலம் எளிய தீர்வு..!

image

நெல்லை மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News December 6, 2025

நெல்லை: வழுக்கி விழுந்த இளைஞர் பரிதாப பலி!

image

கங்கைகொண்டான் ஆலடிபட்டி பகுதியை சேர்ந்த முருகையா என்பவருடைய மகன் கருப்பசாமி (35). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் குளித்துவிட்டு வந்தபோது எதிர்பாரதவிதமாக டைல்சில் கால் வழுக்கி கீழே விழுந்தார். இதில் தலையின் பின்பகுதியில் பலத்த காயமடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலினின்றி உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

error: Content is protected !!