News April 22, 2025
வீரதீர செயல்களுக்கான விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி காவல்துறை சிறப்பு அதிகாரி ஏழுமலை, காவல் துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை முதல் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம்வரை போலீஸ் அதிகாரிகள் செய்த வீரதீர செயல்களை பட்டியலிட்டு இந்த விருதுக்கு அனுப்ப, பரிந்துரைகளை வரும் 24ம் தேதிக்குள் டில்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க கூறப்பட்டுள்ளது.
Similar News
News December 16, 2025
புதுச்சேரி: மீனவரை வெட்டிய 8 வாலிபர்கள் கைது

புதுச்சேரி, தவளக்குப்பம் அருகே மீனவர் வெற்றிவேல் (45), மற்றும் மனைவி சசிகுமாரியை ஒரு கும்பல் வழிமறித்து கத்தியால் சரமாறியாக வெட்டி தாக்கினர். இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பழிவாங்கும் நோக்கில் நடந்த இந்தச் சம்பவத்திற்குப் பூரணாங்குப்பத்தை சேர்ந்த 8 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் மறியல் நடத்திய மீனவர்களிடம் எஸ்.பி. பேச்சுவார்த்தை நடத்தினர்.
News December 16, 2025
புதுச்சேரி: 5 தீயணைப்பு வாகனங்கள் வழங்கிய முதல்வர்

புதுச்சேரி தீயணைப்புத் துறைக்கு 3.84 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து சிறிய ரக தீயணைப்பு வாகனங்கள் மற்றும் இரண்டு நீர் உந்து வாகனம் புதுச்சேரி முதல்வரால், தீயணைப்புத் துறைக்கு வழங்கப்பட்டு இன்று பூஜை செய்யப்பட்டது. இந்த விழாவில் தீயணைப்பு துறையின் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த வாகனங்கள் புதுச்சேரி காரைக்கால் மாகி ஆகிய பகுதிகளுக்கு பிரித்து வழங்கப்படும் என்று அரசு தகவல் தெரிவித்தது.
News December 16, 2025
புதுச்சேரி: சாலை விபத்தில் கர்ப்பிணி பெண்

மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் மற்றும் அவரது கர்ப்பிணி மனைவி நிவேதா, பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. நெட்டப்பாக்கம் அருகே கல்மண்டபம் பகுதியில் பைக் பள்ளத்தில் இறங்கியதால் நிவேதா கீழே விழுந்து வயிற்றில் காயம் ஏற்பட்டது. தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


