News October 24, 2024
வீட்டில் உறங்கிய மூதாட்டியிடம் தங்கநகை பறிப்பு

சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி(70). இவர் இன்று தனது வீட்டில் படுத்து உறங்கியபோது பின்பக்கம் வழியாக உள்ளே புகுந்த மர்மநபர் லட்சுமி அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார் சுதாரித்துக் கொண்ட லட்சுமி சங்கிலியைப் பிடித்துக் கொண்டபோது அதிலிருந்த சரடு குண்டு உள்ளிட்ட 2.5 பவுன் தங்க நகைகளை பறித்து தப்பி சென்றார். சீர்காழி போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர
Similar News
News November 25, 2025
மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு நிலவரம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் மழை இன்றி காணப்படும் நிலையில் இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக செம்பனார்கோவிலில் 33 மிமீ மழை பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 16.80, மணல்மேட்டில் 12.60, சீர்காழி 20.40, கொள்ளிடத்தில் 28, தரங்கம்பாடியில் 9.70 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
News November 25, 2025
மயிலாடுதுறை அருகே 1008 சங்காபிஷேகம்

திருவெண்காடு கிராமத்தில் புதன் ஸ்தலமான ஸ்ரீ சுவேதாரணேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு நேற்று 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு ஹோம பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
News November 25, 2025
மயிலாடுதுறை: சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <


