News August 18, 2024

வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளை

image

வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் அம்பேத்கார் நகரை சார்ந்தவர் பிரசன்னா( 39) இவர் யுபிஎஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். கடந்த 15-ஆம் தேதி மனைவியின் ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்றார். இன்று காலை மேல் மாடியில் குடியிருக்கும் இவரது தாய் பிரேமா வீடு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 35 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.

Similar News

News November 15, 2025

செங்கை: உங்களிடம் பைக், கார் உள்ளதா?

image

செங்கல்பட்டு மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <>லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News November 15, 2025

செங்கை: பிளாஸ்டிக் பையில் சடலமாக இருந்த 5 மாத சிசு!

image

செங்கல்பட்டு, கோவிலம்பாக்கம், ஈச்சங்காடு சிக்னல் அருகே பாழடைந்த கட்டடம் உள்ளது. இதனருகே உள்ள காலி இடத்தில், பிளாஸ்டிக் பையில் 5 மாத ஆண் குழந்தை உடல் வீசப்பட்டிருந்தது. இதனை கண்ட தூய்மைப் பணியாளர்கள், மேடவாக்கம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். மேடவாக்கம் போலீசார் குழந்தை உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து விசாரிக்கின்றனர்.

News November 15, 2025

செங்கல்பட்டில் இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

image

செங்கல்பட்டு, அச்சரப்பாக்கம் கோட்டத்தில் இன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆகவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம், கிளியாநகர், மின்னல்சித்தாமூர், தொழுப்பேடு, கடமலைப்புத்தூர், பெரும்பேர்கண்டிகை, சின்னகயப்பாக்கம், ராமாபுரம், காட்டுக்கரணை, பொற்பனங்கரனை, வேலாமூர், மதூர் & அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்

error: Content is protected !!