News August 18, 2024
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளை

வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் அம்பேத்கார் நகரை சார்ந்தவர் பிரசன்னா( 39) இவர் யுபிஎஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். கடந்த 15-ஆம் தேதி மனைவியின் ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்றார். இன்று காலை மேல் மாடியில் குடியிருக்கும் இவரது தாய் பிரேமா வீடு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 35 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.
Similar News
News October 24, 2025
செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை விழிப்புணர்வு

செங்கல்பட்டு மாவட்டம், காவல்துறையின் மழைக்கால எச்சரிக்கை விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. மழைக்காலங்களில் அறுந்து அல்லது தொங்கி இருக்கும் மின் கம்பிகளை தொட வேண்டாம். அதிகனமழை சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யும் நேரத்தில் சாலையில் தேங்கி நிற்கும் பல்லங்களில் மின் கம்பிகள் அறுந்து விழும் அபாயம் உள்ளதால் மக்கள் கவனமாக இருக்கவும்.
News October 24, 2025
செங்கல்பட்டு: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<
News October 24, 2025
செங்கல்பட்டு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்று இன்று (அக் -24) வெளியிட்டுள்ளது. கனரக வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பாரம் ஏற்றி செல்ல வேண்டாம். நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பாரம் ஏற்றி செல்வதால் ஏற்றிச்செல்லும் வாகனம் மற்றும் சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கும் இதனால் ஆபத்து ஏற்படும் என்பதால் காவல்துறை அதிக பாரம் வேண்டாம் என்ன செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு.


