News August 18, 2024
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளை

வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் அம்பேத்கார் நகரை சார்ந்தவர் பிரசன்னா( 39) இவர் யுபிஎஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். கடந்த 15-ஆம் தேதி மனைவியின் ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்றார். இன்று காலை மேல் மாடியில் குடியிருக்கும் இவரது தாய் பிரேமா வீடு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 35 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.
Similar News
News November 26, 2025
செங்கல்பட்டு: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News November 26, 2025
செங்கை: உங்களுக்கு தெரிய வேண்டிய உதவி எண்

தமிழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக இலவச சேவை தொடர்பு எண் 14416 பயன்பாட்டில் உள்ளது. உங்கள் நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கு இந்த தகவலினை தெரியப்படுத்தி வையுங்கள். பெரிய பெரிய மனநல மருத்துவர்கள் டிசம்பர் மாதத்தில் செய்யூர் அரசு மருத்துவமனைக்கு வருவதாக உள்ளனர். செய்யூர் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
News November 26, 2025
செங்கல்பட்டு: 12-ஆம் வகுப்பு மாணவன் அலையில் சிக்கி மாயம்!

திருப்போரூர் பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் பிரம்மையன் (16), நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மீனவர்கள் தேடியும் மாணவர் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


