News April 23, 2025
வீட்டின் தடுப்பு சுவரில் கார் மோதியதில் டிரைவர் பலி

இராமேஸ்வரம் எம்.ஆர்.டி நகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(47). இராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்று விட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது தங்கச்சிமடம் அருகே நேற்று அதிகாலை தூக்க கலக்கத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். காயமடைந்த இருவரை மீட்ட போலீசார் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Similar News
News December 23, 2025
ராம்நாடு: கலெக்டர் ஆபிஸ்க்கு வெடிகுண்டு மிரட்டல்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வெடிகுண்டு வைத்திருப்பதாக இ–மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து எஸ்.பி., சந்தீஷ் உத்தரவில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் தேவசேனா உதவியுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்றிருந்த கார்கள், டூவீலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலகங்களில் சோதனை செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடைசியில் அது புரளி எனத் தெரியவந்தது.
News December 23, 2025
இராமநாதபுரம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் டிசம்பர் 2025ம் மாதத்திற்கான குறை தீர் நாள் கூட்டம் டிச.26ம் தேதி காலை 10:30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகள் பங்கேற்று விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கலாம். விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News December 23, 2025
இராமநாதபுரம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் டிசம்பர் 2025ம் மாதத்திற்கான குறை தீர் நாள் கூட்டம் டிச.26ம் தேதி காலை 10:30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகள் பங்கேற்று விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கலாம். விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


