News April 23, 2025
வீட்டின் தடுப்பு சுவரில் கார் மோதியதில் டிரைவர் பலி

இராமேஸ்வரம் எம்.ஆர்.டி நகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(47). இராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்று விட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது தங்கச்சிமடம் அருகே நேற்று அதிகாலை தூக்க கலக்கத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். காயமடைந்த இருவரை மீட்ட போலீசார் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Similar News
News October 17, 2025
ராமநாடு: ரோந்து பணி காவல் அதிகாரிகள் விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (செப்17)ல் நண்பகல் 2மணி இருந்து 4மணி வரை ரோந்து பணிகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் விபரம் அட்ட வணையில் தரப்பட்டுள்ளது இராமநாதபுரம், பரமக்குடி, திருவாடனை, கீழக்கரை, ராமேஸ்வரம், முதுகுளத்தூர், கமுதி ஆகிய பகுதி கொடுக்கப் பட்டுள்ளது எனவே அதன்படி பொது மக்கள் அவசர நிலைக்கு தொடர்பு கொள்ள வேண்டுமென மாவட்ட எஸ்பி அறிவுறுத்தியுள்ளார்.
News October 17, 2025
ராம்நாடு: 2,708 காலியிடங்கள்.. ரூ.57,700 சம்பளத்தில் வேலை

ராமநாதபுரம் மக்களே, தமிழக உயர்கல்வித்துறையில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் கீழ் தகுதியான நபர்கள் https://trb.tn.gov.in/ -ல் சென்று விண்ணப்பிக்கலாம். சம்பளம் : ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வரை வழங்கப்படும். இன்று முதல் 10.11.2025 வரை விண்ணப்பிக்கலாம். மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News October 17, 2025
ராம்நாடு: தீயணைப்பு நிலையத்தில் சிக்கிய ரூ.35,000

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில், பட்டாசு பாக்ஸ்கள் மற்றும் ரூ.35,300 பணம் சிக்கியது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் கூறுகையில், தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் (50) மற்றும் மற்ற அலுவலர்களிடம் விசாரணை தொடர்வதாக தெரிவித்துள்ளார்.