News April 23, 2025
வீட்டின் தடுப்பு சுவரில் கார் மோதியதில் டிரைவர் பலி

இராமேஸ்வரம் எம்.ஆர்.டி நகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(47). இராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்று விட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது தங்கச்சிமடம் அருகே நேற்று அதிகாலை தூக்க கலக்கத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். காயமடைந்த இருவரை மீட்ட போலீசார் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Similar News
News November 17, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இலங்கை அருகே நீடித்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடல்பகுதியை நோக்கி நகர உள்ளது. இதன் காரணமாக இன்று இராமநாதபுரம் உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க.
News November 17, 2025
இராமநாதபுரம்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

இராமநாதபுரம் மக்களே; வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் இராமநாதபுரம் வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000472, 9445000473 என்ற எண்களில் புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News November 17, 2025
பரமக்குடி அருகே அரசு பேருந்தும், வேன் மோதி விபத்து

பரமக்குடி அருகேயுள்ள அரியனேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று(நவ.16) இரவு அரசு பேருந்தும், சுற்றுலா வந்த வேணும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பணிகள் ஒருசில காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியது. மேலும் வாகன ஓட்டிகள் கவனமுடன் பயணிக்க பொதுமக்கள் அறிவுரித்தினர்.


