News June 20, 2024

வீடு வீடாக அஞ்சலி செலுத்தி எடப்பாடி பழனிசாமி

image

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் வீடுகளுக்கு நேரில் சென்று(ஜூன் 20) மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். இந்த நிகழ்வின்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Similar News

News April 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

image

அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் – நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். இன்றே (ஏப்.21) கடைசி தேதி என்பதால் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

 டாட்டா ஏசி நேருக்கு நேர் மோதி விபத்து

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தில் இருந்து சங்கராபுரம் நோக்கி சென்ற டாட்டா ஏசி சரக்கு வாகனமும், எதிரே வந்த பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் டாட்டா ஏசி வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளனாது. இந்த விபத்தில் ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. மற்றொருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News April 21, 2025

காயங்களுடன் முதியவர் மரணம் – பின்னணி என்ன?

image

தியாகதுருகம் அடுத்த பெரியமாம்பட்டு ஏரியில் முதியவர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் மலர்விழி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.அப்போது, இறந்தவர் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி சேர்ந்த காந்தி,(70) என தெரியவந்தது. அவர் பெரியமாம்பட்டில் உள்ள அவரது மகள் விஜயாவை பார்க்க சென்ற நிலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்தார்.

error: Content is protected !!