News March 18, 2024
வீடு புகுந்து கணவன், மனைவி மீது தாக்குதல்

தூத்துக்குடி பிரேன் நகரை சேர்ந்தவர் முருகன். இவருக்கும் இவரது சகோதரர்களுக்கும் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக நேற்று மாலை முருகனின் சகோதரர் மாரிமுத்து உட்பட 8 பேர் வீடு புகுந்து முருகனையும் அவரது மனைவியையும் தாக்கியதுடன் வீட்டில் இருந்த பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதுபற்றி தென்பாகம் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 9, 2025
விநாயகர் சிலை கரைக்க வழிமுறைகள்-கலெக்டர்

தூத்துக்குடி, கலெக்டர் இளம்பகவத் அறிவிப்பின்படி, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்கப்பட வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ், தெர்மாகோல் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. சிலைகளுக்கு உலர்ந்த மலர், வைக்கோல் ஆகியவற்றால் ஆபரணங்கள் தயாரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
தூத்துக்குடி: டிகிரி முடித்திருந்தால் ரூ.1,42,400 சம்பளம்….

தூத்துக்குடி மக்களே, இந்திய புலனாய்வுத் துறையில் உதவி மத்திய புலனாய்வு (Intelligence Bureau) அதிகாரிக்கு 3,717 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை மாத சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் இந்த <
News August 9, 2025
தூத்துக்குடி: உதவித் தொகையுடன் தொழிற்பழகுநர் சேர்க்கை

தூத்துக்குடி, ஆக.11ல் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது. 8, 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி, ITI, டிகிரி படித்த இளைஞர்கள் அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம். 200-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாத உதவித்தொகை ரூ.7,700 முதல் ரூ.10,000 வரை வழங்கப்படும். விவரங்களுக்கு கோரம்பள்ளம் தொழிற்பயிற்சி நிலையத்தில் (0461-2340041) தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.