News March 18, 2024

வீடு புகுந்து கணவன், மனைவி மீது தாக்குதல்

image

தூத்துக்குடி பிரேன் நகரை சேர்ந்தவர் முருகன்.  இவருக்கும் இவரது சகோதரர்களுக்கும் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக நேற்று மாலை முருகனின் சகோதரர் மாரிமுத்து உட்பட 8 பேர் வீடு புகுந்து முருகனையும் அவரது மனைவியையும் தாக்கியதுடன் வீட்டில் இருந்த பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதுபற்றி தென்பாகம் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News October 18, 2025

தூத்துக்குடி: வெள்ளம் பாதிப்புகள் புகார் எண்கள்!

image

தூத்துக்குடியில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News October 18, 2025

தூத்துக்குடி: மக்களே கவனம்.. ஆட்சியர் எச்சரிக்கை

image

தூத்துக்குடி அருகே உள்ள உப்பாற்று ஓடையில் பெய்து வரும் கனமழை காரணமாக கோரம்பள்ளம் குளத்திற்கு இன்று காலை 5.45 மணி நிலவரப்படி 1000 கன.அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், குளத்தின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. எனவே, கோரம்பள்ளம் குளம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.

News October 18, 2025

முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் நாள் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் – தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான குறை தீர்ப்பு நாள் கூட்டம் வரும் 28ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் முன்னாள் படை வீரர்கள் தங்கள் குறைகளை இரண்டு பிரதிகளுடன் அடையாள அட்டை தொலைபேசி குறியீட்டுடன் சமர்ப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!