News March 28, 2024
வீடுவீடாக அழைப்பிதழ் வழங்கிய ஆட்சியர்

தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி பகுதியில் இன்று விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் திருவிழா விழிப்புணர்வு அழைப்பிதழை வீடு வீடாக சென்று ஆட்சித்தலைவர் ஷஜீவனா வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Similar News
News December 12, 2025
தேனி: கணவனை தாக்கிய மனைவி மீது வழக்கு

மதுரை டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ரெங்கநாதன் வினோதினி தம்பதியினர். ரெங்கநாதன் 6 ஆண்டுகளாக சவுதியில் பணிபுரிந்து ஒரு ஆண்டுக்கு முன் மதுரை வந்தார். பெற்றோருடன் இருந்த மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். வரமறுத்த வினோதினிக்கு ஆதரவாக 6 பேர் அவரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ரெங்கநாதன் GH-ல் அனுமதிக்கப்பட்டார். வடகரை போலீசார் வினோதினி உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
News December 12, 2025
தேனி: சிறுமி கர்ப்பம்; தொழிலாளி மீது போக்சோ

நாமக்கல், திருச்செங்கோட்டை சேர்ந்தவர் ரவி. இவர் ஒரு சிறுமியை காதலித்துள்ளார். இந்நிலையில் ரவி பெரியகுளத்தில் வேலை செய்த நிலையில், தகவல் அறிந்து பெரியகுளம் வந்த சிறுமியை ரவி கடந்த ஜுன் மாதம் திருமணம் செய்தார். தற்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து பெரியகுளம் ஊராட்சி ஊர்நல அலுவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோவின் கீழ் ரவி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 12, 2025
புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கட்டுரை எழுதும் நபருக்கு பரிசு

தேனி மாவட்டத்தில் நான்காவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு தனித்துவம் சிறப்புகள் மற்றும் வரலாறு குறிப்புகள் குறித்து ஒரு பக்கம் கட்டுரைகளை சிறந்த முறையில் அனுப்பும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இதில் வருகின்ற 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை 8 நாட்கள் தேளி நகரம் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.


