News April 28, 2025
வீடுகளை திறந்து வைத்து படுக்க வேண்டாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயில் உஷ்ணத்தால் இரவு நேரங்களில் மக்கள் வீடுகளை திறந்து வைத்து படுத்து உறங்குகின்றனர். இதனை பயன்படுத்தி திருடர்கள் வீட்டுக்குள் புகுந்து பணம், நகை ஆகியவற்றை திருடும் சம்பவம் அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே இரவு நேரங்களில் வீடுகளை திறந்து வைத்து படுக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 18, 2025
காஞ்சிபுரம்: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

காஞ்சிபுரம் மக்களே.., நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். பின்பு SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம். TamilNilam என்ற செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா உரிமையாளர் விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். SHARE
News December 18, 2025
காஞ்சிபுரம்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால்; இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.( SHARE )
News December 18, 2025
காஞ்சிபுரம்: விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தின் டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை(டிச.19) காலை 11.00 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடத்திட திட்டமிடப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால் டிசம்பர் 2025 மாதத்திற்கான கூட்டம் வரும் டிச.24ஆம் தேதி அன்று காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


