News September 13, 2024

வீடுகளில் கட்சி கொடி அமைச்சர் வேண்டுகோள்

image

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை விடுத்துள்ளார். அதில், “திமுகவை துவங்கிய பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் தங்கள் வீடுகள் தோறும் திமுக கொடியை ஏற்ற வேண்டும்” எனக் கேட்டுள்ளார்.

Similar News

News November 8, 2025

தூத்துக்குடி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வழி

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 8, 2025

திருச்செந்தூர் கடற்கரையில் தங்க இனி அனுமதி இல்லை

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் கடற்கரையில் பக்தர்கள் தங்கி வந்த நிலையில், திருட்டு மற்றும் பொருள்கள் காணாமல் போவது போன்ற சம்பவங்கள் காரணமாக கடற்கரையில் இரவு யாரும் கடற்கரையில் தங்குவதற்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 8, 2025

தூத்துக்குடி: ஒரே நாளில் மூன்று பேர் மீது குண்டாஸ்

image

கோரம்பள்ளம் அருகே உள்ள புதுக்கோட்டையில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி நடந்த கொலை முயற்சி வழக்கில் மேல வாகை குலத்தை சேர்ந்த ஆறுமுகநயினார் சுடலைக்கண்ணு இசக்கி பாண்டி ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். இதனை அடுத்து இந்த மூன்று பேரையும் புதுக்கோட்டை போலீசார் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

error: Content is protected !!