News April 29, 2025
வீடியோ எடுத்துவைத்து மிரட்டிய இருவர் கைது

சேலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் சமூக வலைத்தளம் மூலம் எருக்கஞ்சேரியை சேர்ந்த கிஷோர் (22), முகமது அலி (22) ஆகியோர் சமூகவலைத்தளம் மூலம் பழகி வந்துள்ளனர். இருவரும், சிறுமியிடம் பேசியதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு, தாங்கள் அழைக்கும் இடத்துக்கு வர வேண்டும். இல்லையென்றால் வீடியோவை வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளனர். பின்னர், போலீஸார் பெண் குரலில் பேசி சேலத்திற்கு வரவழைத்து கைது செய்தனர்.
Similar News
News April 29, 2025
சென்னை மெட்ரோவில் இலவசமாகப் பயணிக்கலாம்

சென்னையில் நாளை(ஏப்.30) நடைபெறும் CSK-பஞ்சாப் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டியைக் காண வரும் பார்வையாளர்கள், போட்டிக்கான டிக்கெட்டுகளை வைத்து இலவசமாகப் பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கடைசி ரயில் நள்ளிரவு 1 மணிக்கு அல்லது போட்டி முடிந்த 90வது நிமிடத்தில் புறப்படும். *இந்த செய்தியை IPL பார்க்க செல்லும் நண்பர்களுக்கு பகிரவும்.
News April 29, 2025
சென்னை கலெக்டர் எச்சரிக்கை அறிவிப்பு

சென்னை: கனிமங்கள் கொண்டுசெல்லும் வாகனங்களுக்கு இனிமேல் e-அனுமதி கட்டாயம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் சகதே அறிவித்துள்ளார். மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட கட்டட வேலைகளில் கிடைக்கும் கனிமங்களை அனுமதி இல்லாமல் கடத்தினால், வாகன உரிமையாளர், டிரைவர் மற்றும் நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
News April 29, 2025
சென்னையில் வாழ்பவர்களுக்கு தேவைப்படும் PDF

அரசு திட்டங்களை பெற சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், வாரிசு சான்றிதழ், விதவை சான்றிதழ் என பல வகை சான்றிதழ் தேவைப்படுகின்றன. இவற்றை பெறுவதற்கு வசதியாக சென்னையில் மட்டும் 162 இ-சேவை மையங்கள் உள்ளன. அவை எங்கே உள்ளன என்ற முழு விவரங்கள் உள்ள PDF-ஐ <