News February 15, 2025
விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக எஸ்பியிடம் கோரிக்கை மனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டங்கள் நடக்கும் 2 நாட்கள் டாரஸ் லாரிகளை குமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்க கூடாது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் மாநகரத் தலைவர் நாஞ்சில் ராஜா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார். உடன் விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் கார்த்திக். மாநகர் பொதுச் செயலாளர் கார்கில்மணிகண்டன், செயலாளர்கள் ரமேஷ் காசிவிஸ்வநாதன், பாஜக ரூபின் பலர் உடனிருந்தனர்.
Similar News
News November 19, 2025
குமரி – பெங்களூரு வந்தே பாரத் ரயில்

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வழியாக பெங்களூருக்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை வருகிற ஜனவரி மாதம் தொடங்கும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. இது சென்னை மற்றும் பெங்களூருக்கு ஒரே நேரத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பயன் அளிக்கும் என்றும், 16 பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது. இது குமரி மாவட்ட ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
News November 19, 2025
கன்னியாகுமரி: எங்கெல்லாம் மின்தடை? முன்பே அறியலாம்!

குமரி முழுவதும் எளிதாக மின்தடை எப்போதெல்லாம் ஏற்படும் என்பதை ஆன்லைன் மூலமாக நீங்களே வீட்டில் இருந்தபடி தெரிந்து கொள்ளலாம். மின்வாரியம் இதற்கான வசதியை செய்து தந்துள்ளது. இந்த <
News November 19, 2025
குமரி: முடி உதிர்வு காரணமாக பெண் எடுத்த முடிவு

தென்தாமரை குளம் கீழச்சாலை ஐஸ்வர்யா(27) பட்டதாரி. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக தலை முடி அதிக அளவில் உதிர்ந்து வந்ததால், மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். “தான் உயிரோடு இருப்பதை விட சாவது மேல்” என அடிக்கடி புலம்பி உள்ளார். நவ.17-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது ஐஸ்வர்யா மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


