News February 15, 2025
விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக எஸ்பியிடம் கோரிக்கை மனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டங்கள் நடக்கும் 2 நாட்கள் டாரஸ் லாரிகளை குமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்க கூடாது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் மாநகரத் தலைவர் நாஞ்சில் ராஜா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார். உடன் விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் கார்த்திக். மாநகர் பொதுச் செயலாளர் கார்கில்மணிகண்டன், செயலாளர்கள் ரமேஷ் காசிவிஸ்வநாதன், பாஜக ரூபின் பலர் உடனிருந்தனர்.
Similar News
News November 6, 2025
குமரி: 10th போதும் அரசு வேலை-தேர்வு இல்லை!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…
News November 6, 2025
குமரி: 310 சிலிண்டர்களுடன் கவிழ்ந்த லாரி

தூத்துக்குடியில் இருந்து இன்று அதிகாலை 310 சமையல் கேஸ் சிலிண்டர்களுடன் லாரி திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது சுருளகோடு வெட்டு திருத்திகோணத்தில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடும்போது கேஸ் சிலிண்டர் லாரி ரப்பர் தோட்டத்தில் தலை கீழாக கவிழ்ந்தது.இதில் லாரி டிரைவர் மணிகண்டன் உயிர் தப்பினார். குலசேகரம் தீயணைப்பு வீரர்கள் லாரியிலிருந்து சிலிண்டரை அப்புறப்படுத்தி லாரியை மீட்டனர்.
News November 6, 2025
குமரி: பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்தவ்ர் டெய்லர் லதிகா (49). இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு கண்ணுமா மூடு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து பளுகல் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


