News August 17, 2024
விஷவண்டு கடித்து பலி 6 வயது சிறுவன் பலி

திருவள்ளூர் மாவட்டம் தண்ணீர் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மகன் கார்த்திக் (6), அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று மாலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருக்கும்போது, விஷவண்டுகள் அவரை கண்டித்துள்ளது. வலியில் துடித்த அவரை, பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News December 3, 2025
திருவள்ளூர்: மழை நிக்கப் போகுது!

திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று (டிச.3) கனமழை பெய்யக்கூடும் என்றாலும், இன்று இரவுடன் மழை ஓயும் என வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். மேலும், வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை சென்னையில் அதிகனமழைக்கு வாய்ப்பில்லை என்றும், மீண்டும் டிச.12ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியாவில் மழை நிலவரம் என்ன..?
News December 3, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (டிச.2) பெய்த கனமழையால் தாமரைப்பாக்கம் 11.6 சென்டிமீட்டர், செங்குன்றம் 9.6 செ.மீ., பொன்னேரி 9.4 செ.மீ., சோழவரம், கும்மிடிப்பூண்டி தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஊத்துக்கோட்டை 8.1 செ.மீ., ஆவடி 7.2 செ.மீ., திருவள்ளூர் 6 செ.மீ., பூண்டி 4.7 செ.மீ., திருவாலங்காடு, பூவிருந்தவல்லி தலா 4.3 செ.மீ., பள்ளிப்பட்டு 3.6 செ.மீ., திருத்தணி 2.1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
News December 3, 2025
திருவள்ளூர்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

திருவள்ளூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
இத்தகவலை SHARE பண்ணுங்க!


