News April 19, 2025
விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலி

ஆரணி, அக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயியான இவர் உடல்நிலை குறைவால் நீண்ட காலம் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் விஷத்தை அருந்தி உள்ளார். ஆபத்தான நிலையில் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News November 21, 2025
தி.மலை: தகாத உறவு; மனைவி அடித்து கொலை!

தி.மலை, கொடிக்குப்பத்தை சேர்ந்தவர்கள் ராஜா(56)-சுலோச்சனா (56) இருவரும் சென்னை போரூரில் கட்டட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சுலோச்சனா, வேதநாயகத்துடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. ராஜா சொந்த ஊர் செல்ல, போரூர் பேருந்து நிலையத்தில் மனைவிக்காக காத்திருந்தார். சுலோச்சனா, வேதநாயகத்துடன் பைக்கில் வந்து இறங்கிதை பார்த்த ராஜா, சுத்தியில் மனைவியை அடித்துள்ளார். இதில் காயமடைந்த அவர் நேற்று உயிரிழந்தார்.
News November 21, 2025
தி.மலை: 10th போதும், உளவுத்துறையில் வேலை!

தி.மலை மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு CLICK செய்யவும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க
News November 21, 2025
தி.மலை: சிறுமியிடம் அத்துமீறல்-கம்பி எண்ணும் காமுகன்!

போளூர், பேட்டை வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் குமார் (40) இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போளூர் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். நேற்று (நவ.20) தி.மலை மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், குமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.


