News April 19, 2025

விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலி

image

ஆரணி, அக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயியான இவர் உடல்நிலை குறைவால் நீண்ட காலம் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் விஷத்தை அருந்தி உள்ளார். ஆபத்தான நிலையில் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News January 11, 2026

தி.மலை: டிராக்டர் மீது மோதி தொழிலாளி பரிதாப பலி!

image

செய்யாறு, அனக்காவூரை சேர்ந்தவர் சதீஷ். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மகள் லோகப்பிரியாவை அழைத்து செல்ல, தினேஷ் என்பவருடன் மூவரும் ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த டூவீலர் வாகனம் மோதியதில், டிராக்டர் மீது மோதி சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லோகப்பிரியா மற்றும் தினேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News January 11, 2026

தி.மலை: மீன் பிடிக்க சென்றவர் பிணமாக வந்த சோகம்!

image

தி.மலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த ஜம்போடையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (58) கடந்த 8-ந் தேதி திருப்பனமூரில் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதாக கூறி வீட்டில் இருந்து சென்ற அவர், வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்த நிலையில், மறுநாள் திருப்பனமூர் ஏரியில் பிணமாக மிதந்தார். தகவலறிந்த பிரம்மதேசம் போலீசார் உடலை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.

News January 11, 2026

தி.மலை: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

தி.மலை மாவட்டத்தில் நேற்று (ஜன.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!