News April 19, 2025
விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலி

ஆரணி, அக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயியான இவர் உடல்நிலை குறைவால் நீண்ட காலம் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் விஷத்தை அருந்தி உள்ளார். ஆபத்தான நிலையில் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News December 21, 2025
தி.மலை: மனைவி கண் முன் கணவருக்கு நேர்ந்த சோகம்!

செய்யாறு அருகே விவசாயி செல்வன் (54), டிச-19 தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நேர்ந்த விபத்தில் உயிரிழந்தார். வந்தவாசி – மேல்மா கூட்டுச்சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துபோலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மனைவி கண்ணெதிரே கணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 21, 2025
தி.மலை: அப்பாவை துடிதுடிக்க அடித்து கொன்ற மகன்!

வந்தவாசி அருகே, மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் தந்தை முருகனை (55) அடித்துக் கொன்ற மகன் சரத்குமார் (34) கைது செய்யப்பட்டார். கிருஷ்ணாபுரம் கூட்டுச்சாலையில் உள்ள நிழற்குடையில் தங்கியிருந்த முருகனிடம், அவரது மகன் சரத்குமார் பணம் கேட்டுத் தகராறு செய்துள்ளார். அவர் தர மறுத்ததால் கட்டையால் தாக்கியதில் முருகன் உயிரிழந்தார். வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரைச் சிறையில் அடைத்தனர்.
News December 21, 2025
தி.மலை: வாலிபருக்கு 7 ஆண்டு சிறை!

செங்கம், தோக்கவாடியை சேர்ந்த செந்தில் (எ) விக்னேஷ் (எ) சஞ்சாலன் (33) என்பவர், மூன்று பெயர்களில் அறியப்படும் ஒரே நபர். 2016ஆம் ஆண்டு ராபரி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக செங்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நேற்று டிச.20 நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.


