News April 19, 2025
விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலி

ஆரணி, அக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயியான இவர் உடல்நிலை குறைவால் நீண்ட காலம் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் விஷத்தை அருந்தி உள்ளார். ஆபத்தான நிலையில் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News November 28, 2025
தி.மலை: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <
News November 28, 2025
தி.மலையில் பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் வேலு

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு (நவ.28) திருவண்ணாமலை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வருவாய்த்துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் கருணை அடிப்படையில் சமையலர், சமையல் உதவியாளர், சத்துணவு அமைப்பாளர், அலுவலக உதவியாளர், சாலை பணியாளர், உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
News November 28, 2025
புதிய செயலியை அறிமுகப்படுத்திய அமைச்சர்

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு, திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக காவல் நிலையம், பேருந்து நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து விதமான தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் புதிய செயலியை Mobile App (நவ.28) இன்று பக்தர்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது கலெக்டர் தர்ப்பகராஜ் உடனிருந்தார்.


