News April 19, 2025

விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலி

image

ஆரணி, அக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயியான இவர் உடல்நிலை குறைவால் நீண்ட காலம் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் விஷத்தை அருந்தி உள்ளார். ஆபத்தான நிலையில் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News December 13, 2025

தி.மலை: நிலத்தகராற்றில் விவசாயி நாக்கு கடித்து அறுப்பு!

image

விநாயகபுரத்தை சேர்ந்த விவசாயி ஜோதிபிரகாஷ் தனது நிலத்தில் வரப்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ​​அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர், நிலத்தகராறு காரணமாக ஜோதிபிரகாஷை மண்வெட்டியால் தாக்கி, அவரது நாக்கைக் கடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காயமடைந்த ஜோதிபிரகாஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பெயரில் சங்கீதாவை கைது செய்தனர்.

News December 13, 2025

திருவண்ணாமலை: ஓசி பீடி குடுக்க மறுத்தவருக்கு பிளேடால் வெட்டு

image

ஆரணி அருகே கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி கல்யாணசுந்தரம் அருணகிரிசத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே அமர்ந்திருந்தார். அப்போது, சரவணயுவராஜ் பீடி கேட்டுள்ளார். கல்யாணசுந்தரம் ‘பீடி இல்லை’ என்று மறுத்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணயுவராஜ், தான் வைத்திருந்த பிளேடால் கல்யாணசுந்தரத்தின் முதுகில் வெட்டியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News December 13, 2025

தி.மலை: இரவு ரோந்து பணி விவரங்கள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் (12.12.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!