News April 19, 2025
விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலி

ஆரணி, அக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயியான இவர் உடல்நிலை குறைவால் நீண்ட காலம் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் விஷத்தை அருந்தி உள்ளார். ஆபத்தான நிலையில் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News December 5, 2025
தி.மலை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <
News December 5, 2025
தி.மலையில் கடன் தொல்லை நீக்கும் அதிசய கோயில்

திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குனத்தில் உள்ளது ஸ்ரீ யோக ராம பெருமாள் கோவில். 108 அபிமான தலங்களில் ஒன்றான இங்கு, லட்சுமி தாயாரின் அருளால் செல்வம், நலன் மற்றும் ஆன்மீக முன்னேற்றம் கிடைக்கிறது. ராமர் யோக நிலையில் அமர்ந்துள்ள இந்த தமிழகத்தின் மிகப் பெரிய ராமர் கோயிலில் மந்தார வேண்டினால், வேண்டிய செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். கடன் நீங்கி செல்வம் சேரும் இந்த கோயிலை உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்க
News December 5, 2025
தி.மலை பெண்களே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை- 181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்- 1094, குழந்தைகள் பாதுகாப்பு- 1098, மனஉளைச்சல்- 9911599100, தேசிய பெண்கள் ஆணையம்- 01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்- 044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்


