News April 27, 2025

விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

image

சீரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தனா (18). தனியார் கல்லூரியில் வேதியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 23ம் தேதி பூச்சிகொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சையில் இந்த கீர்த்தனா நேற்று உயிரிழந்தார். மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து வீசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News July 5, 2025

தர்மபுரி: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தர்மபுரி மாவட்ட காவல்துறையின் சார்பில் இரவு ரோந்துப் பணிக்கான அலுவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் A. சிவராமன் அவர்கள் இந்த இரவு ரோந்து பணிக்கு பொறுப்பாக உள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு உள்ளிட்ட ஒவ்வொரு பகுதியிலும் காவல் நிலையங்களின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைக்காக அனைத்து ரோந்து அலுவலர்களின் தொடர்பு எண்கள் உள்ளன.

News July 5, 2025

நாளை தருமபுரி வழியாக ரயில்கள் இயக்கப்படாது

image

ஒசூர் ரயில் நிலையம் அருகே உள்ள மாரநாயக்கனஹள்ளி ரயில்வே பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் நாளை ஜூலை 6 ஆம் தேதி பெங்களூரிலிருந்து வரும் 5 ரயில்கள் தருமபுரி வழியாக இயக்கப்படாமல் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர் வழியாக சேலத்தை சென்றடையும் என தெற்கு ரயில்வே (சேலம் கோட்டம்) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ரயிலில் பயணம் செய்யும் நண்பர்களுக்கு பகிரவும்*

News July 5, 2025

பத்திரப்பதிவு துறையின் ஆன்லைன் போர்டல் பற்றி தெரிஞ்சிக்கோங்க

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே<> இந்த லிங்க் மூலம் விண்ணப்பித்து <<>>பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதில் பெற முடியும். மேலும் தகவலுக்கு (9498452110) & தர்மபுரி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை (04342-260895) அழைக்கலாம். *உறவினர் மற்றும் நண்பர்களுக்கு கட்டாயம் பகிருங்கள்*

error: Content is protected !!