News April 27, 2025

விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

image

சீரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தனா (18). தனியார் கல்லூரியில் வேதியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 23ம் தேதி பூச்சிகொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சையில் இந்த கீர்த்தனா நேற்று உயிரிழந்தார். மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து வீசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 11, 2025

தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (நவ.10) இரவு முதல் இன்று காலை வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூர்யா தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சரவணன், தோப்பூரில் குமரவேல், மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

News November 10, 2025

தருமபுரியில் உலக அமைதி தின பேரணி

image

நாளை உலக அமைதி தினத்தை (11-11-2025) முன்னிட்டு, ஒருங்கிணைந்த கிராமப்புற கல்வி அறக்கட்டளை & கிராம விழிகள் அறக்கட்டளை இணைந்து, இன்று (நவ.10) தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இருந்து அமைதிப் பேரணி நடைபாதையாக நடைபெற்றது. இது தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து மருத்துவமனை வரை நடைபெற்றது. இதில் மருத்துவத் துறைகளில் பயிலும் மாணவ, மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

News November 10, 2025

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய ஆட்சியர்

image

சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த செப்டம்பர் 15 அன்று தமிழ்நாடு முதலமைச்சர், பெற்றோர் இல்லாத உயர் கல்வியில் சேர்ந்துள்ள 8 தருமபுரி மாவட்ட மாணவ, மாணவியர்களுக்கு முதல் கட்டமாக மடிக்கணினிவழங்கப்பட்டது . இதை தொடர்ந்து மூன்று மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சதிஷ் இன்று (நவ.10) மடிக்கணினிகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!