News April 27, 2025
விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

சீரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தனா (18). தனியார் கல்லூரியில் வேதியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 23ம் தேதி பூச்சிகொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சையில் இந்த கீர்த்தனா நேற்று உயிரிழந்தார். மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து வீசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 27, 2025
தர்மபுரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

தர்மபுரி மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே SHARE பண்ணுங்க!
News November 27, 2025
தர்மபுரியில் ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

தர்மபுரி மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)
News November 27, 2025
தர்மபுரியில் துணை முதலமைச்சர் பிறந்தநாள் விழா

அரூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் இன்று(நவ.27)
1. காலை 10.00 – ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கொக்கரப்பட்டி.
2. மதியம் 12.30 – ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கீரைப்பட்டி,
3. மதியம் 2.00 –
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வேப்பம்பட்டி
4.மதியம் 2.30 –
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாம்பாடி
என நடைபெறுகின்றன.


