News April 26, 2025
விஷம் அருந்திய பத்தாம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

கயத்தாறு அருகே உள்ள திருமங்கல குறிச்சியை சேர்ந்தவர் முருகன். இவரது 15 வயது மகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். தேர்வு சரியாக எழுதவில்லை என மனமுடைந்த சிறுமி கடந்த 18ஆம் தேதி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 26, 2025
தூத்துக்குடி: லேசான மழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தூத்துக்குடி,குமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. *உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்*
News April 26, 2025
தூத்துக்குடி அருகே புதிய காற்றழுத்த சுழற்சி

தமிழகத்தில் தென் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டி உள்ள தூத்துக்குடி கடல் பகுதியில் புதிய காற்றழுத்த சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று உங்கள் பகுதியில் மழையை எதிர்பார்க்கலாம். இந்த தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்புங்கள்.
News April 26, 2025
ரயில்வே துறைக்கு தூத்துக்குடி எம்பி கோரிக்கை

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளுக்கு நாள் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் பகுதிக்கு சென்னையிலிருந்து சிதம்பரம் வழியாக ரயில் வருகிறது. எனவே இதனால் பக்தர்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே நேர்வழியில் புதிதாக ரயிலை இயக்க வேண்டும் என தூத்துக்குடி எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.