News April 15, 2025
விஷச்சாராய வழக்கு 3 மாதத்தில் முடிக்கப்படும்- சிபிஐ

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு இன்னும் 3 மாதத்தில் முடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளிகளான தமோதிரன், கன்னுகுட்டி ஆகியோர் ஜாமின் வழங்க மனுதாக்கல் செய்திருந்த நிலையில், ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் சிபிஐ கூறியுள்ளது. மேலும், வழக்கில் எத்தனை பேர் விசாரணையில் உள்ளார்கள் என்பதை தெரிவிக்க சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 27, 2025
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையின் இன்றைய நிலவரம்!

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்று (நவ.27) காய்கறிகளின் விலை நிலவரம் ஒரு கிலோ மதிப்பீட்டில் தக்காளி ரூ.60, கத்தரி ரூ.60, அவரை ரூ.80, வெண்டை ரூ.50, கொத்தவரை ரூ.50, புடலங்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, முருங்கை ரூ.100, முள்ளங்கி ரூ.40, பிரண்டை ரூ.60, மாங்காய் ரூ.60, பச்சை மிளகாய் ரூ.50, பரங்கி ரூ.20 என விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News November 27, 2025
கள்ளக்குறிச்சி: சிசிடிவி பழுது.. போலீசார் திணறல்!

உளுந்துார்பேட்டை பகுதியில் போலீசார் அமைத்த சிசிடிவி கேமராக்கள்பராமரிப்பு இன்றி பழுதாகி கிடப்பதால், திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம ஆசாமிகளை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்களும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்லும் முக்கிய பகுதியில், பைக் திருட்டு, வீடு, கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
News November 27, 2025
கள்ளக்குறிச்சி மக்களுக்கு ஒர் முக்கிய அறிவிப்பு!

திருக்கோவிலுார், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை ஆகிய நீதிமன்ற வளாகங்களில் வரும் டிசம்பர் 13ம் தேதி தேசிய அளவில் லோக் அதாலத் எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதில், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கிக் கடன் வழக்குகள் விசாரித்து சமரசமாக முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


