News April 15, 2025

விஷச்சாராய வழக்கு 3 மாதத்தில் முடிக்கப்படும்- சிபிஐ

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு இன்னும் 3 மாதத்தில் முடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளிகளான தமோதிரன், கன்னுகுட்டி ஆகியோர் ஜாமின் வழங்க மனுதாக்கல் செய்திருந்த நிலையில், ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் சிபிஐ கூறியுள்ளது. மேலும், வழக்கில் எத்தனை பேர் விசாரணையில் உள்ளார்கள் என்பதை தெரிவிக்க சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News November 22, 2025

கள்ளக்குறிச்சி: சிறுமிக்கு சூடு வைத்து பாலியல் வன்கொடுமை!

image

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே 4 வயது சிறுமியின் முகம், உடல் மற்றும் மர்ம உறுப்பில் சிகெரெட்டால் சூடு வைத்தும், கடித்த காயங்களும் இருந்துள்ளன. இது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்த நிலையில், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், சிறுமியின் தாயிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 22, 2025

கள்ளக்குறிச்சி: 2 பைக் மோதி விபத்துக்குள்ளானது

image

கூ.கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன் நம்பர் 21 ஆம் தேதி விவசாய நிலத்திற்கு செல்வதற்காக நரிஓடை தரைபாலம் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் வந்த சேந்தநாடு பகுதியை சேர்ந்த மண்டிப் ஒட்டி வந்த பைக் மோதியதில் ராஜேந்திரன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரது மகன் ராஜேஷ் அளித்த புகாரில் திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News November 22, 2025

கள்ளக்குறிச்சியில் துணிகரம் – 1 1/2 பவுன் நகை திருட்டு!

image

கள்ளக்குறிச்சி: கணங்கூரை சேர்ந்த பெரியசாமி மற்றும் அவரது மனைவி தனலட்சுமி இருவரும் புதிதாக கட்டி வரும் வீட்டில் உறங்கியுள்ளனர். பின் நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது தனது பழைய வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அங்கிருந்த 1 1/2 பவுன் நகை மற்றும் 5,000 பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்த புகாரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!