News April 26, 2025
விஷக் கதண்டு கடித்ததால் விவசாயி உயிரிழப்பு!

சின்னதாராபுரம் அருகே வெள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகம் . இவர் தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது விஷக் கதண்டு கடித்துள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக சின்னதாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 3, 2025
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி இம்மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19.12.2025 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடத்தப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04324-223555 மற்றும் 9345261136என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
News December 2, 2025
கடவூர் அருகே பெட்டிக்கடை உரிமையாளர் கைது!

கடவூர் தாலுகா குரும்பபட்டி அடுத்த கஸ்தூரி பட்டியை சேர்ந்த செல்வராஜ் மனைவி ரதிமணி (45). இவர் அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற பாலவிடுதி போலீசார் புகையிலை விற்ற ரதிமணி மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்தனர்.
News December 2, 2025
கடவூர் அருகே பெட்டிக்கடை உரிமையாளர் கைது!

கடவூர் தாலுகா குரும்பபட்டி அடுத்த கஸ்தூரி பட்டியை சேர்ந்த செல்வராஜ் மனைவி ரதிமணி (45). இவர் அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற பாலவிடுதி போலீசார் புகையிலை விற்ற ரதிமணி மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்தனர்.


