News January 3, 2025
விவசாய கடன் காலம் நீட்டிக்க கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு சங்கங்கள் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் விவசாய கடன்கள் வழங்கி வருகின்றன. ஆனால் தற்போது அணைகளில் தண்ணீர் திறந்து விட தாமதமானதால், வாழை போன்ற பயிர்களை இப்போதுதான் விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். எனவே, கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்குவதை ஜனவரி மாதம் வரை நீட்டிக்க தூத்துக்குடி மாவட்ட பிஜேபி தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News July 9, 2025
உள்ளூர் வங்கியில் ரூ.85,000 ஊதியத்தில் வேலை

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் நெல்லை, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க <
News July 9, 2025
தூத்துக்குடியில் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு <
News July 9, 2025
தூத்துக்குடி தண்டவாளத்தில் ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ரயில் நிலையத்திற்கும், நாசரேத் ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட ரயில் தண்டவாளப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் ஒன்று உடல் சிதைந்த நிலையில் காணப்படுவதாக ரயில்வே போலீசார் மற்றும் நாசரேத் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி போலீசார் இறந்தவர் யார்? என விசாரித்து வருகின்றனர்.