News May 7, 2025

விவசாயி வெட்டி படுகொலை காவல்துறை விசாரணை

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியசாமிபுரத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ் மகன் ஆபிரகாம். விவசாயியான இவர் இரவு வீட்டில் இருந்த போது மர்மநபர்கள் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலே அவர் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த சின்ன கோவிலாங்குளம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முறையற்ற உறவால் கொலை நடந்ததாக தகவல்.

Similar News

News December 6, 2025

தென்காசி: என் சாவுக்கு காரணம்., இளம்பெண் கடிதம்!

image

சிவகிரியை சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி பொன் ஆனந்தி (26). கடையநல்லூர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பொன் ஆனந்தி, ஆன்லைன் விளையாட்டில் ரூ.63 ஆயிரம் இழந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘ என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளேன்.’ என அவர் கடிதம் எழுதியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

News December 6, 2025

தென்காசி: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. கடைசி நாள்!

image

தென்காசி மாவட்டத்தில் நடப்பு பிசானம் பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சேர டிசம்பர் 16ம் தேதிக்குள் பிரிமியம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கர் நெல் பயிரை காப்பீடு செய்ய விவசாயிகள் ரூ.540/- பிரிமியம் செலுத்த வேண்டும். கடைசி நாள் வரை காத்திருக்காமல் விரைந்து பிரிமியம் செலுத்திட மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார். SHARE

News December 6, 2025

பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர கடைசி நாள்

image

தென்காசி மாவட்டத்தில் நடப்பு பிசானம் பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சேர டிசம்பர் 16ம் தேதிக்குள் பிரிமியம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.  ஒரு ஏக்கர் நெல் பயிரை காப்பீடு செய்ய விவசாயிகள் ரூ.540/- பிரிமியம் செலுத்த வேண்டும். கடைசி நாள் வரை காத்திருக்காமல் விரைந்து பிரிமியம் செலுத்திட மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார். *SHARE

error: Content is protected !!