News October 23, 2024

விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் தகவல்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் வருகிற அக்டோபர் 25-ம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களாக வழங்கலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 17, 2025

வேலூர்: ஒரு செயலி போதும்! அத்தனை பிரச்னைகளும் தீர்வு

image

“மெரி பஞ்சாயத்து” மொபைல் செயலி மூலம் கிராம மக்கள் இனி எல்லா விதமான புகார்களையும் நேரடியாகப் பதிவு செய்யலாம். இதில் உள்ள ‘Grievance/Complaint’ பிரிவில் பெயர், கிராமம் மற்றும் புகார் விவரங்களை உள்ளீடு செய்து, தேவையான ஆவணங்களையும் இணைக்கலாம். புகார் செய்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை நேரடியாகக் கண்காணிக்க முடியும். ஷேர்

News September 17, 2025

வேலூர்: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்த அறிவுக்கரசி (35). இவரது கணவர் குறளமுதன் இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அறிவுக்கரசி கந்தனேரி பகுதியில் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அறிவுக்கரசி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News September 17, 2025

வேலூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

image

வேலூர் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு கிளிக் <<>>செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!