News June 27, 2024
விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நாளை காலை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கற்பகம் தெரிவித்துள்ளாா். இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, வேளாண்மை சம்பந்தமான கடனுதவிகள், வேளாண் இடுபொருட்கள், இயந்திரங்கள் மற்றும் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
பெரம்பலூர்: வசமாக சிக்கிய தப்பி ஓடிய போக்சோ கைதி!

பெரம்பலூர் மாவட்டம் ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்த வாஞ்சிநாதன் என்பவர், போக்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், சிறையில் அடைப்பதற்காக அழைத்து சென்ற பொழுது தப்பி ஓடிவிட்டார். இதனை தொடர்ந்து வாஞ்சிநாதன், கேரள மாநிலம் சபரிமலையில் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் பெரம்பலூர் காவல் துறையினர் வாஞ்சிநாதனை சபரிமலையில் கைது செய்து பெரம்பலூர் அழைத்து வந்தனர்.
News December 1, 2025
பெரம்பலூர்: SIR பணிகள் தீவிரம்!

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 98 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. பெரம்பலூா் (ம) குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5,90,490 வாக்காளா்கள் உள்ளனர்.
News December 1, 2025
களரம்பட்டி: ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளியின் அவல நிலை

பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி கிராமத்தில், அரசு ஆதிதிராவிட நலத் தொடக்கப் பள்ளியின் ஓடுகள் முற்றிலும் சேதமடைந்த இடங்களில் பேனர்கள் வைத்து மழைநீர்கள் வராத அளவுக்கு மறைத்துள்ளனர். மேலும் இந்த அவலநிலை மாணவர்களுக்கு பெரிய விபத்து ஏற்படும் வகையில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்களுடைய பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


