News April 22, 2025
விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 25.04.25 அன்று முற்பகல் 10.00 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்
Similar News
News November 20, 2025
சிவகங்கை: 2 பேர் மீது குண்டாஸ்.. கலெக்டர் உத்தரவு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் திருப்பாச்சேத்தி காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய சிலம்பரசன் மற்றும் ரஞ்சித்தை நேற்று (நவ. 19) குண்டர் தடுப்பு காவலில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உத்தரவிட்டார்.
News November 20, 2025
சிவகங்கை: 10th முடித்தால் உளவுத்துறையில் வேலை ரெடி!

சிவகங்கை மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
News November 20, 2025
சிவகங்கை: SIR ரில் சந்தேகமா.? வாட்சப் எண் வெளியீடு.!

தமிழக முழுவதும் எஸ்ஐஆர் என்னும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பொது மக்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருப்பதால், மாநில தேர்தல் ஆணையம் உதவி எண்கள் அறிவித்துள்ளது. 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், அல்லது 9444123456 என்ற எண்ணில் whatsapp மூலம் உங்களது சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


