News February 17, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21ஆம் தேதி அன்று காலை 10.30 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
Similar News
News November 12, 2025
ராம்நாடு: இலவச மருத்துவ முகாம் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை, மண்டபம் ஒன்றிய மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு அடையாள அட்டை, உபகரணங்கள் வழங்குவதற்கான இலவச மருத்துவ முகாம் உச்சிப்புளி தொடக்கப்பள்ளியில் (நவ.13) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் 18 வயதிற்குட்பட்ட பார்வை, செவித்திறன், கை, கால் செயல்பாடு, மனவளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளை பங்கேற்று பயன் பெறலாம்.
News November 12, 2025
ராம்நாடு: அழகு சாதனங்கள் தாயாரிக்கும் இலவச பயிற்சி

இராமநாதபுரம் மாவட்டம், 8/59, C5 மாதவன் நகர் , பரமக்குடி பகுதியில் தமிழக அரசு சார்பில் இலவச மூலிகை பொருட்கள் அழகு சாதனங்கள் தாயாரிக்கும் பயிற்சி வருகின்ற டிசம்பர் 20, 21 மற்றும் 22 தேதிகளில் வழங்கப்பட உள்ளது. பயிற்சி நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், தொடர்புக்கு 8531864866. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க.
News November 12, 2025
ராம்நாடு: இளைஞர் வெட்டிக்கொலை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பெரிய கடை காய்கறி மார்க்கெட் தெருவில் சுரேஷ் பாக்கியம் தம்பதியரின் மகன் கார்த்திக் (21) என்கிற இளைஞர் நண்பர்களுடன் ஏற்பட்ட முன் விரோதத்தால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தகவல் அறிந்த பரமக்குடி டவுன் போலீசார்கள் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.


