News February 17, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21ஆம் தேதி அன்று காலை 10.30 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

Similar News

News November 5, 2025

ராம்நாடு: டிப்ளமோ போதும்; CHENNAI METRO வில் வேலை.!

image

ராம்நாடு மக்களே, சென்னை மெட்ரோவில் Supervisor மற்றும் Technician பணியிடங்களுக்கு ஏராளமான காலியிடங்கள் உள்ளன. ITI மற்றும் DIPLOMA முடித்தவர்கள் இந்த லிங்கை<> கிளிக் <<>>செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கி, மதுரையில் நவ.13 & 14 ல் நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு வேலை பெறலாம். இதற்கு சம்பளமாக ரூ.30,000 வரை வழங்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்.

News November 5, 2025

ராம்நாடு: இரு சக்கர வாகன பழுது நீக்குதல் இலவச பயிற்சி

image

இராமநாதபுரம் சிகில் ராஜ வீதி சாந்த் பீவி காம்ப்ளக்ஸ் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்புப் பயிற்சி நிறுவனம் நடத்தும் இருசக்கர வாகனப் பழுது நீக்குதல் பயிற்சி இலவசமாக நடைப்பெற உள்ளது. பயிற்சி ஆரம்பிக்கும் நாள் (நவ -12) பயிற்சி நாட்கள் 30.நேரம்:காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை. பயிற்சி நடைப்பெறும் இடம்: பூமாலை வணிக வளாகம், புது பஸ்ஸ்டாண்ட் அருகில் தொடர்புக்கு: 8825954443.

News November 5, 2025

இராம்நாடு: லஞ்சம் வாங்கிய 3 அதிகாரிகள் கூண்டோடு கைது

image

பரமக்குடியைச் சேர்ந்த அரசு பதிவு ஒப்பந்ததாரர், ராமநாதபுரம் DRDA சார்பில் டெண்டர் எடுத்த தார் ரோடு வேலை முடித்த தொகையை விடுவிக்கக்கோரி ஊரக வளர்ச்சி பொறியியல் பிரிவு துணை வளர்ச்சி அலுவலர் வீரசேகரனை (அக்.24) அணுகினார். தொகையை விடுவிக்க ரூ.1.20 லட்சம் வீரசேகரன் கேட்டார். இந்த தொகையை வீரசேகரன், நாகலிங்கம், அருண் ஆகியோர் வாங்கியபோது ராமநாதபுரம் ஊழல் தடுப்பு போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்..

error: Content is protected !!