News April 14, 2025

விவசாயிகளுக்கு நாளை கடைசி நாள்

image

மத்திய மற்றும் மாநில அரசினுடைய நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகளுக்கென தனி அடையாள எண் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான காலக்கெடு நாளையோடு(15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 15, 2025

தி.மலை: மாடியிலிருந்து கீழே விழுந்தவர் பலி!

image

ஆரணி கே.கே. நகரைச் சேர்ந்த 55 வயதான தாமோதரன் என்பவர், தனது வீட்டின் 2வது மாடியில் கட்டுமானப் பணியின்போது, போதிய பொறியாளர் மற்றும் மேஸ்திரி இன்றி தானே மர வேலைகளைச் செய்து வந்துள்ளார். பணியின்போது தவறி கீழே விழுந்த அவரை, ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்து, பின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

News December 15, 2025

தி.மலை: கார் மோதிய விபத்தில் பெண் படுகாயம்

image

சென்னையைச் சேர்ந்த சரத்குமார் ஓட்டிவந்த கார், வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் கடைசிகுளம் அருகே நிலைதடுமாறி மின் கம்பத்தில் மோதி, பின்னர் சாலையோரம் சென்ற மகாலட்சுமி என்ற பெண் மீது மோதியது. படுகாயமடைந்த அப்பெண், வந்தவாசி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனை அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News December 14, 2025

உதயநிதியை புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்

image

தி.மலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.“கொள்கை எதிரிகள் உதயநிதியை ‘Most Dangerous’ என கூறுகிறார்கள். அந்த அளவுக்கு அவர் கொள்கையில் உறுதியாக இருக்கிறார்” என பேசினார். 2026 தேர்தல் இலக்கை நோக்கி இளைஞர்கள் களப்பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் பேசினார்.

error: Content is protected !!